நான் கல்வியை வளர்ப்பதற்கு மிகவும் பாடுபட்டுள்ளேன். நாங்கள் போராட்டக் காலத்தில் கூட கல்விக்கான பல வேலைத் திட்டங்களை செய்தோம் என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா) தெரிவித்துள்ளார்.
வாகரைப் பிரதேசத்தில் இன்றையதினம் இடம்பெற்ற, மாணவர்களுக்கான கற்றல் உபகரம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கல்வி என்பது ஒரு பொதுவான விடயம். நாங்கள் போராட்ட காலத்தில் கூட கல்விக்கான பல வேலைத் திட்டங்களை செய்தோம். நான் கல்வியை வளர்ப்பதற்கு பாடுபட்டுள்ளேன். அதில் போராட்டத்தில் கல்வி பிரிவை ஒரு அம்சமாக உருவாக்கி வைத்திருந்தேன்.
வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் கூடியளவு கல்வி வளர்ச்சிக்காக கல்விக் கழகம் என்ற நிறைய அமைப்புக்கள் செயற்பட்டது. போராட்ட காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரைப் பிரதேசத்தில் கல்வி அபிவிருத்திக் குழு என்று முதல் முதலாக ஆரம்பித்தோம்.
வாகரைப் பிரதேசத்திலுள்ள பல பாடசாலைகளை தரமுயர்த்தி உள்ளோம். இன்னும் தரமுயர்த்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றேன். இதில் கூடுதல் கவனம் எடுத்து செயற்படுவேன் என குறிப்பிட்டுள்ளார்.

