Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ராஜித எம்.பி.க்கு எதிராக சட்ட மா அதிபர் பிணை மீளாய்வு மனு தாக்கல்

January 9, 2020
in News, Politics, World
0

சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் ஊடகவியலாளர் சந்திப்பு குறித்த வழக்கு தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு பிணை வழங்கப்பட்டதை எதிர்த்து சட்ட மா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றில் மீளாய்வு மனுவொன்று நேற்று   தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச தரப்பு சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இதனை அறிவித்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு கடந்த டிசம்பர் 24ஆம் திகதி பிடியாணை வழங்கப்பட்ட நிலையில் அவர் டிசம்பர் 26ஆம் திகதி நாரஹென்பிட்டியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, அவர் டிசம்பர் 27ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து வைத்தியசாலையில் வைத்தே அவருக்கு டிசம்பர் 30ஆம் திகதி வரை விளக்கமறியல் தீர்ப்பு வழங்கப்பட்டது. பின்னர் டிசம்பர் 30ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் பிணையும் வழங்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு எதிராகவே நேற்று  பிணை மீளாய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

அமெரிக்க ஜனாதிபதி விசேட அறிக்கை

Next Post

மத்திய கிழக்கில் அமைதி நிலவாது- டிரம்ப் வெள்ளை மாளிகையில் அறிவிப்பு

Next Post

மத்திய கிழக்கில் அமைதி நிலவாது- டிரம்ப் வெள்ளை மாளிகையில் அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures