நடிக்க தெரியாத நடிகர்கள் எல்லாம் முன்னணி வகிக்கிறார்கள்; அது காலத்தின் சூழல் என்று இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் கூறியுள்ளது, சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை வடபழனி கமலா திரையரங்கில், அடவி படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் பேசியதாவது: தமிழ் சினிமாவில், அடவி படம் ஒரு முக்கியமான படமாக இருக்கும். மலைவாழ் பகுதி மக்களின் வாழ்வியலை மையப்படுத்திய இத்திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. நாயகன் வினோத், ஒரு அற்புதமான நடிகர். அவர் மேலும் சிறக்க வேண்டும். நடிக்க தெரியாதவர்கள் எல்லாம், தற்போது முன்னனி நடிகர்களாக வலம் வருகின்றனர். அது எல்லாம் காலத்தின் சூழல். வினோத் சிறந்த நடிகர், அவர் பெரிய நடிகராக வலம் வருவார் என்றார்.

