சர்வதேச உடன்படிக்கைகளை ரத்து செய்வதற்கு அரசாங்கத்திற்கு பூரண ஆதரவை வழங்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்ட போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தேசிய ஐக்கியம், பௌத்த மத முன்னுரிமை, ஒரு மித்த நாடு ஆகியவையே தமது கொள்கையாகவும் இருந்தது.
குறித்த கொள்கைகள் சிலரது தனிப்பட்ட பிரசாரங்கள் காரணமாக மக்களிடம் கொண்டு சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டது.
கடந்த காலத்தில் நாட்டின் வளங்களை சர்வதேசத்திற்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தமது தரப்பினர் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
ஆகவே எதிர்கட்சி தலைவராக பரிந்துரைக்கப்பட்டுள்ள தான் எதிர்வரும் 3 ஆம் திகதிக்கு பின்னர் தொடர்ந்தும் அந்த பதவியில் நீடிப்பதற்கான சந்தரப்பம் வழங்கப்படும் பட்சத்தில் மிலேனியம் சவால் ஒத்துழைப்பு, எக்ஸா, சோஃபா ஆகிய சர்வதேச உடன்படிக்கைகளை ரத்து செய்வதற்கு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில்இ முன்னாள் பிரதமர் பிரதமர் சஜித் பிரேமதாஸ மற்றும், முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கிடையிலான் முக்கிய சந்திப்பு நாளை இடம்பெற உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

