Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ஸ்டுடியோ அமைக்கும் ஆசையில் சிரஞ்சீவி

December 24, 2019
in Cinema
0

தென்னிந்திய மொழித் திரைப்படங்களுக்கு ஒரு காலத்தில் சென்னை தான் தலைமையிடமாக இருந்தது. தமிழைத் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப் படங்களும் சென்னையில் உள்ள ஸ்டுடியோக்களில் தான் அதிகம் படமாக்கப்பட்டன. ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக அந்தந்த மொழிப் படங்களின் தலைமையிடத்தை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு மாற்றிக் கொண்டார்கள்.

இப்போது பல தமிழ்ப் படங்கள் கூட சென்னையில் உள்ள ஸ்டுடியோக்களில் படமாக்கப்படாமல் ஐதராபாத்தில் படமாக்குவதை சில ஹீரோக்கள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ரஜினிகாந்த், அஜித் ஆகியோர் தற்போது நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பு ஐதராபாத்தில்தான் நடந்து வருகிறது. இதனால் தமிழ் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.

இந்நிலையில் தங்களது மொழிப் படங்கள் வேறு மாநிலங்களுக்கு போய்விடக் கூடாது என்பதற்காக தெலுங்குத் திரையுலகத்தில் உள்ள முன்னணி நடிகர்கள் ஐதராபாத்தில் சொந்தமாக ஸ்டுடியோக்களை நிர்மாணித்தார்கள். அதன்படி மற்றமொழிப் படங்களின் படப்பிடிப்பு சென்னை பக்கம் நடப்பதேயில்லை.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டது. தற்போதுள்ள ஐதராபாத், தெலங்கானாவின் தலைநகரானது. அதனால், ஸ்டுடியோக்கள் அனைத்தும் அந்த மாநிலத்துக்குரியதானது. எனவே, ஆந்திராவிலும் ஸ்டுடியோக்களை அமைக்க சில நடிகர்கள் முயற்சி செய்து வருகிறார்கள்.

நடிகர் சிரஞ்சீவி ஐதராபாத்தில் எப்போதோ ஸ்டுடியோ அமைக்க திட்டமிட்டிருந்தார். பின்னர் சில காரணங்களுக்காக அதை கைவிட்டார். இப்போது ஆந்திரா மாநிலத்தின் தலைநகரங்களில் ஒன்றாக விசாகப்பட்டிணத்தை நியமிக்கும் எண்ணம் அரசுக்கு உள்ளது. அதனால், அங்கு ஒரு பெரிய ஸ்டுடியோவை உருவாக்க சிரஞ்சீவி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. கடற்கரை நகரமான விசாகப்பட்டிணத்தில் இதற்கு முன்பு பல தெலுங்குப் படங்களின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இந்த முயற்சிக்கு ஆந்திர அரசின் ஆதரவும் கிடைக்கும் எனத் தெரிகிறது.

தமிழில் முன்னணியில் உள்ள நடிகர்கள் இப்படி சென்னையில் ஸ்டுடியோக்களை உருவாக்கினால், தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகள் ஐதராபாத்திற்கு செல்லாமல், இங்குள்ள தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

Previous Post

‘தலைவி’ படத்தில் நடித்த – கங்கனா ரணவத்

Next Post

திருமணம் செய்து கொள்ள உள்ள மிருதுளா

Next Post

திருமணம் செய்து கொள்ள உள்ள மிருதுளா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures