Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தேசிய மக்கள் தொகை பதிவேட்டைப் புதுப்பிக்க 8 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

December 24, 2019
in News, Politics, Sports
0

தேசிய மக்கள் தொகை பதிவேட்டைப் புதுப்பிப்பதற்கு 8 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த மக்கள் தொகைப் பதிவேடு குறித்துக் கணக்கெடுக்கும் பணிகள் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து தொடங்கும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்படி, நாடு முழுவதும் ஒவ்வொரு வீட்டிலும் கணக்கெடுப்பு 2020ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் செப்டம்பர் 30 ஆம் திகதி வரை நடத்தப்படும். இதன்மூலம் ஒரு தகவல் களஞ்சியத்தை உருவாக்கி நாட்டில் வசிக்கும் மக்கள் குறித்த முழுமையான அளவைத் தெரிந்துகொள்ள முடியும்.

நாட்டில் எந்தப் பகுதியிலும், யார் குறைந்தபட்சம் 6 மாதங்கள் அல்லது அதற்கு மேல் வசித்தாலும் அவர்கள் என்.பி.ஆர். பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் புள்ளிவிவரத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சுய விபரத் தகவலும் இடம்பெறும்.

தேசிய மக்கள் தொகைப் பதிவேடு கடந்த 2010ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் தொடங்கப்பட்டது. அப்போது மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிகளும் நடந்தன. அதன்பின்னர் 2015ஆம் ஆண்டு இதில் உள்ள தகவல்கள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு டிஜிற்றல் மயமாக்கப்பட்டுள்ளன.

இப்போது சேகரிக்கப்பட்ட அனைத்துத் தகவல்களும், விவரங்களும் 2021ஆம் ஆண்டு மக்கள் தொகை பதிவேட்டில் பதிவேற்றம் செய்யப்படும். இந்தப் பணிகள் அசாம் மாநிலம் தவிர்த்து, அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வரும் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நடைபெறும்.

இந்தத் தகவல் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் மற்றும் பதிவாளர் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை கடந்த ஓகஸ்ற் மாதம் வெளியிடப்பட்டது.

கிராமம், துணை நகரம், துணை மாவட்டம், மாவட்டம், மாநிலம், தேசிய அளவில் மக்கள் தொகைப் பதிவேடு குறித்துக் கணக்கெடுப்பு குடியுரிமைச் சட்டம் 1955இன் மற்றும் குடியுரிமை விதிகள் 2003இன் கீழும் நடைபெறும்.

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனும் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் தங்கள் பெயரைப் பதிவு செய்வது கட்டாயமாகும். இந்தத் தகவல் களஞ்சியத்தின் நோக்கம் நாட்டில் எத்தனை பேர் வசிக்கிறார்கள் என்பது குறித்து முழுமையான தகவல் திரட்டுவதற்காகத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

த.தே.கூ. ஏனைய இடங்களை எமக்கு விட்டுத்தர வேண்டும்- இராதாகிருஷ்ணன்

Next Post

இந்தியாவில் பொருளாதார தேக்க நிலை: எச்சரிக்கும் சர்வதேச நாணய நிதியம்

Next Post

இந்தியாவில் பொருளாதார தேக்க நிலை: எச்சரிக்கும் சர்வதேச நாணய நிதியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures