முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் ஊடக செயலாளர் மலித் விஜேநாயக்கவின் இல்லம் கடந்த 14ம் திகதி மாலை இரகசிய பொலிஸாரினால் சோதனை செய்து அவரது மடிக்கணனியில் இருந்த தரவுகள் மற்றும் மென்பொருளை கொண்டு சென்றுள்ளனர்.
ரகசிய பொலிஸார் வந்தபோது மலித் விஜேநாயக்க அவரது வீட்டில் இல்லை, நீதிமன்ற உத்தரவு இருப்பதாகக் கூறி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வீட்டை சோதனையிட்டுள்ளனர்.
மலித் விஜேநாயக்க அச்சு மற்றும் வெப் ஊடகவியலாளராக செயற்படுபவராவார்.
ஜனாதிபதி தேர்தலின் போது வெள்ளை வேன்களில் மக்களை கடத்துதல், சுவிஸ் தூதரக அலுவலக அதிகாரி கடத்தப்பட்டமை தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சரினால் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பை நிகழ்த்த அதனுடன் தொடர்புடைய தகவல்களைப் பெற மற்றும் நிறைவேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மற்றும் தற்போது நிகழும் அரசாங்கத்திற்கு எதிராக மக்களுக்குள் வெறுப்புணர்வை வெளிபடுத்தும் வகையில் ஊடகங்களில் செய்திகள் வெளியிட்டமை தொடர்பாக தகவல்களை பெற்றுக்கொள்ள பொலிஸாரினால் சோதனையிடப்பட்டுள்ளது.
இதற்கு முதல் மலித் விஜேநாயக்கவை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வாக்கு மூலம் வழங்க இரண்டு முறை அழைக்கப்பட்ட போதிலும் அவர் வருகைதரவில்லை.
அவருக்கு எதிராக இதற்கு முதல் முன்னாள் ஜனாதிபதி ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் அமெரிக்காவிற்கு பயணம் செய்யும் போது அவரையும் அவரது குடும்பத்தினரையும் புகைப்படமெடுத்து ஊடகங்களுக்கு வெளியிட்டமை தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விமான நிலைய விஐபி முனையத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

