கழிவுத் தேயிலை வியாபாரத்தை ஒழிப்பதற்கு தொடர்ச்சியான சுற்றிவளைப்புக்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்து வருவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் எம்.ஆர்.லதீப் தெரிவித்துள்ளார்.
கழிவுத் தேயிலை ஒழிப்பு தொடர்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட 270 சுற்றிவளைப்புகளில் 446 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 38,44,074 கிலோ கிராம் கழிவுத் தேயிலையும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தின் உடனுவர, வெல்மப்பொட, தவுலகல, பூவெலிகட, ஹன்தெஸ்ஸ, முறுதலாவ ஆகிய பிரதேசங்களிலும், அம்பலாங்கொட, எல்பிட்டிய, இரத்தினபுரி, போலியாகொட ஆகிய பிரதேசங்களிலும் பாரிய அளவில் இடம்பெற்ற கழிவுத் தேயிலை வியாபாரங்கள் முடக்கப்பட்டுள்ளதுடன், குறித்த வர்த்தகர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு கழிவுத் தேயிலை வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் தொடர்பிலான தகவல்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு தெரியப்படுத்துமாறும் பிரதி பொலிஸ் மா அதிபர் எம்.ஆர்.லத்தீப் பொது மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

