Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எவரும் தனி இராஜ்ஜியத்தை கோர முடியாது!

December 16, 2019
in News, Politics, World
0

வாக்குகளை காரணம் காட்டி, தனி இராஜ்ஜியத்தையோ அல்லது தனியான அலகினையோ இனிமேல் எந்தவொரு அடிப்படைவாதிகளும் கோர முடியாத நிலைமை இலங்கையில் ஏற்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதித் தேர்தலில் நாம் பாரிய வெற்றியை அடைந்துள்ளோம். இந்த வெற்றியில் ஒரு முக்கியத்துவம் காணப்படுகிறது.

அதாவது, எந்தவொரு அடிப்படைவாதத்திற்கும் அடிபணியாமல்தான் இந்த வெற்றியை நாம் பெற்றுக் கொண்டுள்ளோம்.

72 வருடங்களுக்குப் பிறகு, சிங்கள மக்களின் வாக்குகளால் ஜனாதிபதியொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வெற்றியில் அனைத்து இன மக்களுக்கும் இடமுள்ளது.

நல்லிணக்கம் என்பது பதாதைகளில் அல்லாது மக்களின் மனங்களில் இருந்து வரவேண்டும். இதுதான் உண்மையான வெற்றியாகும்.

எமது இந்த வெற்றியை இன்று எந்தவொரு அடிப்படைவாதிகளும் உரிமைக்கொண்டாட முடியாது. நாம் இனவாதிகள் அல்ல.

உங்களுக்கு வாக்குகளைத் தருகிறோம். நீங்கள் எங்களுக்கு தனி இராஜ்ஜியத்தை தாருங்கள் அல்லது தனி அலகு தாருங்கள் என இனி எவரும் எம்மிடம் கோர முடியாது.

இந்த விளையாட்டுக்கள் எல்லாம் இனிமேல் எம்மிடம் செல்லுபடியாகாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

கோட்டாபயவிற்கு பதில் வழங்கியுள்ள பிரித்தானிய பிரதமர்

Next Post

வட மாகாண முன்னாள் முதலமைச்சரை கைது செய்யுமாறு முறைப்பாடு

Next Post

வட மாகாண முன்னாள் முதலமைச்சரை கைது செய்யுமாறு முறைப்பாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures