Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

December 10, 2019
in News, Politics, World
0

பொருளாதார மற்றும் கலாசார நடவடிக்கைக்காக எதிர்காலத்தில் இலங்கைக்கு தேவையான ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதாக மத்திய கிழக்கு நாடுகளுக்கான தூதுவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் தெரிவித்துள்ளனர்.

மத்திய கிழக்கு தூதுவர் குழுமத்தை பிரதிநிதித்துவம் செய்யும் நாடுகளின் தூதுவர்கள் நேற்று (09) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை சந்தித்த போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்த தூதுவர்கள், ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கைக்கும் தமது நாடுகளுக்குமிடையிலான தொடர்புகளை அனைத்து துறைகளிலும் பலப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக உறுதியளித்தனர்.

பலஸ்தீன, எகிப்து, குவைத், ஓமான், ஈராக், லிபியா மற்றும் கட்டார் நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கைக்கான தூதுவர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post

மாணவர்களுக்கு ஆணையாளர் விசேட எச்சரிக்கை

Next Post

அபேக்ஷா வைத்தியசாலையின் மருந்துப் பிரச்சினை கடந்த அரசாங்கத்தின் பலவீனம்

Next Post

அபேக்ஷா வைத்தியசாலையின் மருந்துப் பிரச்சினை கடந்த அரசாங்கத்தின் பலவீனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures