கடந்த தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு ஜனநாயகமான முறையில் தலைவணங்கி, சபாநாயகர் உடனடியாக தனது பதவியில் இருந்து விலக வேண்டும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையை பார்வையிட சென்றிருந்த போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
நாங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் கரு ஜயசூரிய ஜனநாயகத்தை மதிக்கும் தலைவர் என்ற வகையிலேயே பிரபலமானவர்.
தற்போதைய அரசாங்கத்திற்கு தடையின்றி வேலை செய்ய இடமளித்து விட்டு செல்லுமாறு மக்கள் இரண்டு தேர்தல் வெற்றிகள் மூலம் தெரிவித்துள்ளனர்.
இதனால், மக்களின் பணிகளுக்கு தடையாக இருக்காமல், நாடாளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல இடமளித்து சபாநாயகர் ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

