Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு பிணை

December 4, 2019
in News, Politics, Sports, World
0

ஐ.என்.எக்ஸ் முறைகேடு தொடர்பான அமுலாக்கத்துறை வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை அமுலாக்கத்துறை கடந்த ஒக்டோபர் 16ஆம் திகதி கைது செய்தது.

இதையடுத்து ப.சிதம்பரம் தொடர்ந்த பிணை மனுவை டெல்லி நீதிமன்றம் நிராகரித்திருந்த நிலையில், அவர் உச்ச நீதிமன்றத்தில் பிணை கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நிறைவடைந்துள்ள நிலையில், நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு இன்று ப.சிதம்பரத்திற்கு நிபந்தனையுடனான பிணை வழங்கியுள்ளது.

முன்னதாக, சிபிஐ தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் ஒக்டோபர் 22ஆம் திகதி உச்ச நீதிமன்றம் சிதம்பரத்திற்கு பிணை வழங்கியிருந்தது.

தற்போது, அமுலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலும் பிணை வழங்கப்பட்டுள்ளதால் அவர் திகார் சிறையில் இருந்து வெளியே வரவுள்ளார்.

அவர் மொத்தமாக 106 நாட்கள் சிறையில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

அரசியல் செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ள சஜித்!!

Next Post

வெள்ளத்தில் மூழ்கும் போரதீவுப்பற்று

Next Post

வெள்ளத்தில் மூழ்கும் போரதீவுப்பற்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures