அமைச்சரவைக்கு நியமிக்கப்பட்டுள்ள அமைச்சுக்களுக்கான விடய உள்ளடக்கம் மற்றும் அந்த அமைச்சுக்களுக்குக் கீழ் வரும் நிறுவனங்கள் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் இன்று (26) வெளிவரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பிலான அறிவிப்பு ஜனாதிபதி ஒப்பத்துடன் அரச அச்சகத்துக்கு சென்றுள்ளதாகவும், நேற்று (25) அச்சிடும் பணி ஆரம்பிக்கப்பட்டதாகவும் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
அமைச்சரவையில் பிரதமர் உட்பட 16 பேர் அங்கம் வகிக்கின்றனர். நாட்டிலுள்ள சகல அரச நிறுவனங்களும் இந்த 16 அமைச்சுக்களின் பொறுப்பிலும் ஜனாதிபதியின் கீழாலும் வரும் விதத்தில் பிரித்து வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

