ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து நவம்பர் 17 ஆம் திகதிக்குப் பின்னர் தேசிய பாதுகாப்பும், சட்டம் ஒழுங்கும் முறையாக நிலைநாட்டப்படும் எனவும் வீழ்ச்சியடைந்துள்ள கலாசாரம் மீண்டும் கட்டியெழுப்பப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் போதைப்பொருள் உற்பத்தியாளர்கள் ஆகியோர் நாட்டை விட்டு வெளியேறுவது தான் சிறந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் போதைப்பொருள் வியாபாரத்திற்கும் அடிமையாகியுள்ளார்கள். இதற்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும். மக்களின் வாழ்க்கை செலவுகள் அதிகரிக்கும்போது வாழ்வதற்காக நடுத்தர மக்கள் தவறான வியாபாரங்களை புரிந்துள்ளார்கள் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
பண்டாரகமவில் நேற்று (03) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

