Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சஹ்ரானை வணங்கும் கோத்தபாய!

October 26, 2019
in News, Politics, World
0

தொடர் குண்டுத் தாக்குதலுக்கு காரணமான சஹ்ரானை காரணம் காட்டி ஆட்சியை கைப்பற்றுவதற்கு ராஜபக்ஷ முயன்றுள்ளனர். சஹ்ரான் என்ற பயங்கரவாதியை கோத்தபாய தற்போது வணங்குவாரென நான் நினைக்கின்றேன் என்று அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் பேசிய அவர்,

பெரும்பாலான நாடுகளில் இனவாதத்தை முன்னிருத்தி ஆட்சி கைப்பற்றிய வரலாறு காணப்படுகின்றது.

சிரியாவில் அசாட், சதாம் உசைன், லிபியாவில் கடாபி, முகாபே, ஹிட்லர் ஆகியோர் இனவாதத்தின் ஊடாகவே ஆட்சி செய்தனர். அதேபோன்றதொரு செயற்பாட்டினையே ராஜபக்ஷவினரும் தற்போது முன்னெடுத்துள்ளனர்.

தொடர் குண்டுத் தாக்குதலுக்கு காரணமான சஹ்ரானை காரணம் காட்டி ஆட்சியை கைப்பற்றுவதற்கு ராஜபக்ஷ முயன்றுள்ளனர். சஹ்ரான் என்ற பயங்கரவாதியை கோத்தபாய தற்போது வணங்குவாரென நான் நினைக்கின்றேன்.

கோத்தபாய ஆதரவு தெரிவிக்கும் டிலான், கம்மன்பில ஆகியோர் இதற்கு முன்னர் அவரை மிகவும் தவறாக குறிப்பிட்டனர். நான் கூறுவது பொய்யென்றால், இந்த காணொளியைின் ஊடாக மக்கள் புரிந்துகொள்ள முடியும்.

டிலான், “கோத்தபாயவினால்தான் இதற்கு முற்பட்ட தேர்தலில் மஹிந்த தோல்வியை சந்தித்ததாக குறிப்பிட்டார்.

அதேபோன்று கம்மன்பில பஷில் ராஜபக்ஷ நல்லவர் என்பதை வெளிப்படுத்துவதற்காக, “பிரதேச சபையில் கூட அங்கம் வகிக்காத ஒருவருக்கு நாட்டை வழிநடத்துவதற்கு கொடுப்பது ஏற்புடைய விடயம் அல்லவென கோத்தபாய குறித்து கூறியிருந்தார்.

இவ்வாறெல்லாம் கூறிவிட்டு இன்று அவருக்கு ஆதரவு வழங்குவதற்காக வேறுவிதமாக பேசுகின்றார்கள். இவர்கள் மக்களை ஏமாற்ற முனைகின்றார்கள்.

இராணுவ வீரர்கள் குறித்து பேசும் ராஜபக்ஷக்கள் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த சரத்பொன்சேகாவை சிறையில் வைத்ததை மக்கள் மறக்க கூடும். சரத்பொன்சாகாவை ஏன் சிறையில் அடைத்தார்கள் என்பதற்கான காரணம் உண்மையாக எனக்கு தெரியாது.

சரத் பொன்சேகா போன்ற சிறந்த வீரர் உண்மையாக இல்லை. கோட்டாபயதான் அவரை சிறையில் அடைப்பதற்கு காரணமாக இருந்திருக்க வேண்டும்.

அதுமாத்திரமின்றி ஊடகவியலாளர் லசந்த விக்ரமசிங்க கொலை, கடத்தல் உள்ளிட்ட பல்வேறு நாச காரியங்களை புரிந்தவருக்கு மக்கள் ஆதரவு வழங்கப்போகின்றீர்களா?

எனவே இவ்விடயங்களை எல்லாம் கவனத்திற்கொண்டு உரிய முடிவை மக்கள் எடுக்க வேண்டும்” என்றார்.

Previous Post

இன்று முதல், வீட்டு நாய்களைக் கட்டிப் போடுங்கள்

Next Post

இலங்கையில் நிலத்தை விற்ற ஒரே ஜனாதிபதி மஹிந்த!

Next Post

இலங்கையில் நிலத்தை விற்ற ஒரே ஜனாதிபதி மஹிந்த!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures