எல்பிட்டிய பிரதேச சபைக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக நேற்று (11) காலை நடைபெற்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றிபெற்று அதிகாரத்தை தனதாகியுள்ளது.
அதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி 17 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 3 ஆசனங்களையும் பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 7 ஆசனங்களைப் பெற்றுள்ளது. மக்கள் விடுதலை முன்னணி 2 ஆசனங்களைத் தனதாக்கியுள்ளது.

