Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிறு­பான்­மை­யின மக்கள் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கே வாக்­க­ளிப்­பார்கள்!!

October 10, 2019
in News, Politics, World
0

சிறு­பான்­மை­யின மக்கள் இம்­முறை தேர்­தலில் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கே வாக்­க­ளிப்­பார்கள் என்­பதை உணர்ந்­து­கொண்ட சிலர், அந்த வாக்கு வங்­கியை உடைப்­ப­தற்­கான முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர். அதன் ஓரங்­க­மாக சஜித்­துக்கு கிடைக்­கவுள்ள கிழக்கு மாகாண முஸ்­லிம்­களின் வாக்­கு­களைப் பிள­வு­ப­டுத்தும் நோக்கில் எம்.ஏ.எல்.எம்.ஹிஸ்­புல்லாஹ் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராகக் கள­மி­றக்­கப்­பட்­டி­ருக்­கிறார் என்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மஹ்ரூப் தெரி­வித்தார்.

கொழும்­பி­லுள்ள ஐக்­கிய தேசியக் கட்­சியின் அலு­வ­ல­கத்தில் நேற்­றைய தினம் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார். அவர் அங்கு மேலும் கூறி­ய­தா­வது,

இம்­முறை ஜனா­தி­பதித் தேர்­தலில் எமது வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­சவின் வெற்றி உறு­தி­செய்­யப்­பட்­டி­ருப்­ப­துடன், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அனை­வரும் அவ­ருக்கே வாக்­க­ளிப்­பார்கள் என்­ப­தையும் பலர் உணர்ந்து கொண்­டி­ருக்­கின்­றார்கள். எனவே அந்த வெற்­றியைக் குழப்பி, சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு கிடைக்­கக்­கூ­டிய சிறு­பான்­மை­யின மக்­களின் வாக்­கு­களைப் சிதரடிக்கப்பட்டு முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்­றார்கள்.

அதன் ஓரங்­க­மா­கவே கிழக்கு மாகாண ஆளு­ந­ராகப் பதவி வகித்த எம்.ஏ.எல்.எம்.ஹிஸ்­புல்லாஹ் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராகக் கள­மி­றக்­கப்­பட்­டி­ருக்­கிறார். இந்த நாட்டில் சிறு­பான்­மை­யி­னத்தைச் சேர்ந்த ஒருவர் ஜனா­தி­ப­தி­யா­வது சாத்­தி­ய­மற்­றது என்று நன்கு தெரிந்­தி­ருந்­தும்­கூட அவர் தேர்­தலில் போட்­டி­யி­டு­கிறார் என்றால் அதற்குக் காரணம், கிழக்கு மாகா­ணத்தில் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு கிடைக்­கக்­கூ­டிய முஸ்லிம் மக்­களின் வாக்­கு­களை சிதரடிக்கும் நோக்­க­மே­யாகும்.

உயிர்த்த ஞாயி­று­தின குண்­டுத்­தாக்­கு­தல்­க­ளுக்குப் பின்னர் ரிஷாத் பதி­யுதீன் மற்றும் ஹிஸ்­புல்லாஹ் ஆகியோர் பெரும் சிக்­கலை எதிர்­கொண்டபோது, அமைச்­ச­ர­வையில் அங்கம் வகித்த அனைத்து முஸ்லிம் அமைச்­சர்­களும் தமது பத­வி­களைத் துறந்து அவர்­க­ளுக்கு ஆத­ர­வாக நின்­றார்கள். அவ்­வா­றி­ருக்­கையில் இப்­போது முஸ்லிம் மக்­களின் வாக்­கு­களைப் சிதரடிக்கும் குறுகிய நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த செயற்பாடு வரவேற்கத்தக்கதல்ல. எனினும் இன்றளவில் முஸ்லிம் மக்கள் ஒவ்வொருவர் தொடர்பிலும் நன்கு அறிந்திருக்கிறார்கள். ஆகவே ஹிஸ்புல்லாஹ்வுக்கு பெருமளவில் வாக்களிக்கமாட்டார்கள்.

Previous Post

போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை

Next Post

முஸ்லிம் மக்­களை ஏமாற்றி ஆட்சியை கைப்பற்ற முடியாது !!

Next Post

முஸ்லிம் மக்­களை ஏமாற்றி ஆட்சியை கைப்பற்ற முடியாது !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures