Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விதிகளை மீறுவோருக்கு தேர்தல் ஆணையகம் கடும் எச்சரிக்கை!

October 8, 2019
in News, Politics, World
0

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக வேட்பாளர்கள் பிரச்சார நடவடிக்கைகளை விதிக்கப்பட்டுள்ள சட்ட வரையறைக்கு உட்பட்தாக முன்னெடுக்க வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்கழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பதவிக்கு வேட்பாளர் தெரிவு செய்யப்படும் வரையில் ஒரு வேட்பாளர் இன்னுமொரு வேட்பாளருக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலான செயற்பாடுகள், பிரச்சார துண்டு பிரசுரங்கள், பெனர்கள் முதலானவற்றை காட்சிப் படுத்துதல் தொடர்பாக சட்ட விடயங்களை கவனத்தில் கொள்ளுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கலின் பின்னராக ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், “தேர்தல் தொடர்பான சட்ட விதிகளை நடைமுறைப்புடுத்துவது தொடர்பான அறிவுறுத்தல்கள் பொலிஸ்மா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளது. வேட்பாளர் ஒருவர் தனது பிரச்சார கூட்டத்தை நடத்தும் போது பிரச்சார கூட்ட தினத்தன்று அவரது பிரச்சார பதாதைகள், பெனர்கள் முதலானவற்றை குறிப்பிட்ட கூட்டம் நடைபெறும் இடத்தில் மாத்திரம் காட்சி படுத்தவேண்டும்.

குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு அமைவாக குறித்த எல்லை பகுதிக்குட்பட்டதாக இது இடம்பெறவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். வேட்புமனு தினம் முதல் ஜனாதிபதி தேர்தல் முடியும் வரையில் அதாவது (தேர்தல் முடிந்த 1 வார காலம் வரை) ஊர்வலம் நடத்தப்படுவது தடையாகும். இத்தகைய ஊர்வலங்களை தடுப்பதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொள்வர். இவ்வாறு நடத்தப்படும் ஊர்வலங்களை காணொளி மூலம் பதிவு செய்து அதனை பொலிஸார் நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்து சட்ட நடவடிக்கையை மேற்கொள்வர்.

வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக நன்கொடை வழங்குதல், தேவையற்ற அழுத்தங்களை ஏற்படுத்தல், வழிபாடுகள் மற்றும் வழிபாட்டு தலங்கள் மூலமாக இதற்கு சாதகமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், மற்றும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தும் போது பொலிஸாரின் அனுமதியுடனேயே பயன்படுத்த வேண்டும்.

அரசாங்க சொத்துக்களை தேர்தல் வேட்பளர்களின் பிரச்சாரங்களுக்கு ஆதரவாக பயன்படுத்தக்கூடாது, அரசாங்க ஊழியர்கள் அலுவலக நேரங்களில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாது” எனவும், தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்டுள்ள ஒழுக்கக் கோவையின்படி செயற்பட்டு தேர்தல் நடவடிக்கைகளை சிறந்த முறையில் முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்கழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post

வரலாற்றில் முதற்தடவையாக 7500 பேர்!!

Next Post

மலையகத்திற்கான புகையிரத சேவைகளும் ஆரம்பம்

Next Post

மலையகத்திற்கான புகையிரத சேவைகளும் ஆரம்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures