ஐக்கிய தேசிய கட்சியின் விசேட மாநாட்டில் ஆறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஐக்கிய தேசிய கட்சியின் 77வது மாநாடு தற்போது கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்களில் இடம்பெற்று வருகின்றது.
இதன்போதே ஆறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஆதவனின் அலுவலக செய்தியாளர் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான அமைச்சர் சஜித் பிரேமதாசவை கட்சியின் பங்காளி கட்சிகளும் ஐ.தே.முவிலுள்ள கட்சிகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அத்துடன், இதன்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் கட்சியின் தலைவர் என பிரேரிக்கபட்டதுடன், 52 நாட்கள் இடம்பெற்ற அரசியல் குழப்பத்தின்போது, நாடாளுமன்றத்தை பாதுகாத்த சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
அதிகார பகிர்வு, நிறைவேற்று அதிகார ஒழிப்பு, தேர்தல் முறை சீர்திருத்தம் என்பவற்றை செய்வதற்காக பணிகள் தொடர வேண்டும் எனவும் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.
மேலும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பலத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், அரசியல் பழிவாங்களுக்கு ஆளானோருக்கு நியாயம் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குறித்த மாநாட்டில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர்.

