பயணிகள் வருகையில்லாமலேயே 46 பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இது தவிர ஹஜ் புனிதப் பயணம் செல்லும் 36 பாகிஸ்தான் விமானங்களும் பெரும்பாலும் காலியாகவே பயணிக்கின்றன. இத்தகவலை அரசுக்கு விமானப் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்த போதும் அரசுத் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பயணிகள் எண்ணிக்கை இல்லாத காரணத்தால் பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் நிறுவனம் சுமார் 18 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது. பாகிஸ்தானின் பொருளாதார நிலை மிகவும் கவலையளிக்கும் நிலையில் இந்த இழப்புகள் அதன் சுமையை மக்கள் மீது மேலும் அதிகரிக்கக்கூடும்.
தீவிரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் காரணத்தால் FATFமற்றும் உலக நாடுகளின் நிதியுதவி பாகிஸ்தானுக்கு நிறுத்தப்படும் சூழலும் பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.