ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தனது அமெரிக்க குடியுரிமையினை இரத்து செய்து விட்டதற்கான ஆவணங்களை வேட்புமனு தாக்கல் செய்யு முன்னர் வெளிப்படுத்த முடியுமா? என பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டின் இறையாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மக்கள் இரட்டை பிரஜாவுரிமையுள்ள ஒருவரை ஜனாதிபதியாக தெரிவு செய்யமாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க பிரஜாவுரிமையினை தான் இரத்து செய்து விட்டதாக வெறும் பேச்சளவில் மாத்திரமே பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ குறிப்பிடுகின்றார். உரிய ஆவணங்கள் ஏதும் இதுவரையில் உரிய இடத்திற்கும் நாட்டு மக்களுக்கும் பகிரங்கப்படுத்தப்படவில்லை.
எமது நாட்டின் இறையாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் எவரும் அமெரிக்க பிரஜையினை நாட்டின் ஜனாதிபதியாக்க மாட்டார்கள் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.