ஜனாதிபதித் தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி முறைமையை நீக்குவது குறித்து கலந்துரையாடுவது முறைகேடான ஒன்று என நீதி அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.
இதுபோன்ற ஒரு தீர்மானம் யாருடைய தேவையை நிறைவு செய்ய அமைச்சரவைக்குக் கொண்டுவந்தது என்பது தனக்குத் தெரியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
சஜித் பிரேமதாசவுக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பெரும்பான்மை ஆதரவு காணப்படுவதனால் அவருக்கு கட்டாயம் வேட்பாளர் பதவி வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய தேசிய கட்சியின் கீழ் பலமான ஓர் அரசாங்கம் அமைக்கப்பட்டு அதன் பின்னர் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையை நீக்க நடவடிக்கை எடுக்கலாம் எனவும் அவர் மேலும் கூறினார்.