தற்போது வீழ்ச்சி கண்டிருக்கும் நாட்டை மீட்டெடுக்க வேண்டிய நிர்பந்தமொன்று ஏற்பட்டிருக்கிறது என மஹிந்த அணி தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே லங்கா சமசமாஜக்கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘யுத்தகளத்தில் நின்று, அதனை வழிநடத்திய பீட்ல்மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவாக தமிழ் மக்களால் வாக்களிக்க முடியுமெனின், அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்து பாதுகாப்பு அமைச்சின் நிதி விவகாரங்கள் உள்ளடங்கலான விவகாரங்களைக் கையாண்ட கோட்டாபய ராஜபக்ஷவை ஏன் ஆதரிக்க முடியாது.
தற்போது வீழ்ச்சி கண்டிருக்கும் நாட்டை மீட்டெடுக்க வேண்டிய நிர்பந்தமொன்று ஏற்பட்டிருக்கிறது. எதிர்வரும் 29ஆம் திகதி லேக்ஹவுஸிற்கு முன்பாக நாங்கள் ஏற்பாடு செய்யவிருக்கும் கூட்டத்தின் போது இதுகுறித்த யோசனை ஒன்றையும் நிறைவேற்றவிருக்கிறோம்’ என குறிப்பிட்டுள்ளார்.