Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

காவிரி ஆற்றுப்படுகையில் இரவு நேரத்தில் அள்ளபடும் மணல்

July 25, 2019
in News, Politics, World
0

காவிரி ஆற்றுப்படுகையில் அள்ளப்படும் மண், செங்கல் சூளைகளுக்கு விற்பதை தடுக்கக்கோரிய வழக்கில், தஞ்சை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூரை சேர்ந்த கலியபெருமாள் என்பவர் தாக்கல் செய்த மனுவில், காவிரி ஆற்றுப்படுகை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள கண்மாய்கள், கால்வாய்கள், தடுப்பணைகளில் உள்ள சவடு மண் எடுக்க கடந்த 2017-ல் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது என்றும், இந்த மண் விவசாயிகளுக்கும், பானை உற்பத்தியாளர்களுக்கும் மட்டுமே வழங்க வேண்டும் என அரசாணையில் கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அணைக்கு அருகேயும் மண் அள்ளுவதாகவும், இந்த மண் செங்கல் சூளைகளுக்கும், ரியல் எஸ்டேட் தொழிலுக்கும் விற்கப்படுவதாகவும், இரவில் மண் எடுப்பதாகவும், அதிக ஆழத்துக்கு மணல் அள்ளுவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே, அரசாணையில் கூறியபடி செயல்படுத்த உத்தரவிட வேண்டுமென மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு, இந்த மனு தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Previous Post

மன்னாரில் 385 கிலோ கிராம் பீடி சுற்றும் இலைகள் மீட்பு!

Next Post

மனைவியை துப்பாக்கியால் சுட்டு நாடகமாடிய கணவன் ?

Next Post

மனைவியை துப்பாக்கியால் சுட்டு நாடகமாடிய கணவன் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures