Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மட்டக்களப்பில் பொலிஸாரின் துப்பாக்கி பறிப்பு

July 4, 2019
in News, Politics, World
0

மட்டக்களப்பு புதுநகர் திமிலைதீவு பிரதேசத்தில் போக்குவரத்து பொலிசார் இன்று பகல்  சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அங்கு மோட்டர் சைக்கிளில் சென்ற இருவருக்கும் பொலிசாருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் கைதுப்பாக்கியை குறித்த இருவரும் பறித்துச் சென்றதையடுத்து குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

மட்டு தலைமையக பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள புதுநகர் திமிலைதீவு ஆலயத்துக்கு அருகில் சம்பவமினமான இன்று வியாழக்கிழமை பகல் 11 மணியளவில் வீதி போக்குவரத்து பொலிசார் இருவர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இருவர் தலைகவசம் இன்றி வவுணதீவு பிரதேசத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது பொலிசார் அந்த மோட்டார் சைக்கிளை நிறுத்த முற்பட்டபோது மோட்டர் சைக்கிளை செலுத்தி சென்றவர்கள் மோட்டர் சைக்கிளை திருப்ப முயன்ற போது வீதியின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படி ரக வாகனத்துடன் மோதுண்டு விபத்துக் குள்ளானதில் இருவரும் காயமடைந்தனர்

இதனையடுத்து அங்கு ஒன்று திரண்ட பொதுமக்களுக்கும் பொலிசாருக்குமிடயில் ஏற்பட்ட முறுகல் நிலையையடுத்து பொலிசார் மீது தாக்க முற்பட்டவேளை பொலிஸ் உத்தியோகத்தரின் இடுப்பில் இருந்த கைதுப்பாக்கி ஒன்றை இனம் தெரியாத ஒருவர் அபகரித்து தப்பிச் சென்றுள்ளார் இதனையடத்தே. அங்கு பதற்றம் ஏற்பட்டது

இந்நிலையில் விபத்தில் காயமடைந்த இருவரை மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்கு பொலிசார் மற்றும் இராணுவத்தினர் சிசேட அதிரடிப்படையினர் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் வவுணதீவு களப்பு பகுதியில் இருவரை சந்தேகத்தில் கைது செய்துள்ளனர்

இதேவேளை புதூர் மற்றும் வவுணதீவு பகுதிகளில் மேவதிகமாக இராணுவத்தினர் பொலிசார் அழைக்கப்பட்டு அந்த பகுதிகளில் பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் மற்று விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

பேஸ்புக், இன்ஸ்ட்கிராம், வட்ஸ்அப் மீண்டு வழமைக்கு

Next Post

அத்துரலிய ரத்ன தேரருக்கு றிஷாட் பதியுதீன் சவால்

Next Post

அத்துரலிய ரத்ன தேரருக்கு றிஷாட் பதியுதீன் சவால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures