Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பொய்யுரைக்கிறார் இராணுவ தளபதி: உதய கம்மன்பில

July 2, 2019
in News, Politics, World
0

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் விடயத்தில் இராணுவ தளபதி மகேஸ் சேனாநாயக்க பொய்யுரைக்கிறாரென பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது உதய கம்மன்பில இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறியுள்ளதாவது,

“தொடர் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை விடுதலை செய்யுமாறு மன்னாரிலுள்ள பிரபல அமைச்சர் ஒருவர் தமக்கு அழுத்தத்தை பிரயோகித்ததாக மகேஸ் சேனாநாயக்க ஊடகங்களில் குறிப்பிட்டிருந்தார்.

அதேபோன்று தாக்குதலுக்கு காரணமான சந்தேகநபர்களை விடுதலை செய்யுமாறு ரிசாட் தொலைபேசி ஊடாக கோரியதாககவும் அவர் கூறியிருந்தார்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களின் விபரங்களை ரிசாட் கோரிய போது ஒரு வருடத்திற்கு பின்னர் வழங்குகிறேன் என தான் கூறியதாக மகேஸ் சேனாநாயக்க குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இவ்விடயங்கள் குறித்து வேறு விதமான பதில்களையே அவர் வழங்கியுள்ளார்.

இத்தகைய விடயங்களை அவதானிக்கும் போது, மகேஸ் சேனாநாயக்க பொய்யுரைத்துள்ளார் என்பது உறுதியாகின்றது” என உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

பூஜித் ஜயசுந்தரவும் வைத்தியசாலையில் அனுமதி?

Next Post

மரண தண்டனைக்கு எதிரான மனு – விசாரணைகளுக்காக குழு நியமனம்

Next Post

மரண தண்டனைக்கு எதிரான மனு – விசாரணைகளுக்காக குழு நியமனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures