Saturday, September 13, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இரு நாள் கோரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு

June 21, 2019
in News, Politics, World
0

இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி­யுடன் பேச்சு நடத்­து­வ­தற்­காக புது­டில்லி செல்­வ­தற்கு முன்னர் இனப்­ பி­ரச்­சி­னைக்­கான தீர்வு தாம­த­மா­வது குறித்து பாரா­ளு­மன்­றத்தில் இரண்டு நாட்கள் விவாதம் நடத்தக் கோரு­வ­தற்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தீர்மா­னித்­தி­ருக்­கின்­றது.

நேற்­று­ முன்­தினம் நடை­பெற்ற தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்றக் குழுக் கூட்­டத்தில் இத்­த­கைய முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ளது.

சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தலை­மையில் நடை­பெறும் பாரா­ளு­மன்றக் கட்சித் தலை­வர்­களின் கூட்­டத்தில் இந்த இரண்டு நாட் கள் விசேட விவா­தத்­துக்­கான கோரிக்­கையை கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் முன்­வைத்து, அதற்­கான திகதி ஒதுக்­கீட்டைப் பெற்­றுக்­கொள்­ளவும் இந்தக் கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

இனப்­பி­ரச்­சி­னைக்கு இணக்­க­மான சுமுகத் தீர்வு எட்­டு­வ­தற்கு பு­லி­களே முட்­டுக்­கட்டை என்று தென்­னி­லங்­கையால் முன்னர் திரும்பத் திரும்பக் கூறப்­பட்டு வந்­தது.

இரா­ணுவ ரீதியில் விடு­த­லைப்­பு­லிகள் முறி­ய­டிக்­கப்­பட்டு பத்து ஆண்­டுகள் கடந்து விட்­டன. ஆனால், இன்­னமும் தமி­ழரின் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு நீதி, நியா­ய­ மான தீர்வு காணப்­ப­டவே இல்லை. காணப்­படும் என்ற நம்­பிக்­கையும் அருகி வரு­கின்­றது. தீர்­வுக்­கான இணக்­கமும், வாய்ப்பும் இந்தப் பாரா­ளு­மன்­றத்­தி­லேயே உரு­வான பின்­னரும், அது நடை­மு­றைக்கு வராமல் போன­மைக்குக் காரணம் யாது? – என்ற கேள்­வியின் அடிப்­ப­டையில் இத்­த­கைய விசேட விவாதம் ஒன்­றுக்குக் கட்சித் தலை­வர்­களின் கூட்­டத்தில் இரா.சம்­பந்தன் கோரிக்கை விடுக்க வேண்டும் எனக் கூட்­ட ­மைப்பின் பாரா­ளு­மன்றக் குழுக் கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

முதலில் பாரா­ளு­மன்­றத்தில் இது குறித்த விசேட விவா­தத்தில் தமிழர் தரப்பின் ஆதங்­கங்கள், நீதி­யான எதிர்­பார்ப்­புகள் போன்­ற­வற்றைப் பகி­ரங்­கப்­ப­டுத்­து­வது என்றும், பின்னர் அடுத்த கட்­ட­மாக, இந்­தியப் பிர­த மர் நரேந்­திர மோடி உட்­பட சர்­வ­தேச நாடு­களின் தலை­வர்கள் மற்றும் பிர­தி­நி­தி­களை நேரில், தமி­ழ­ருக்கு நீதி­யான தீர்வு வழங்­கப்­ப­டாமல் இழுத்­த­டிக்­கின்­றமை குறித்து தெளி­வு­ப­டுத்தி சர்­வ­தே­சத்தின் கவ­னத்தை ஆழ­மாகத் திருப்­பு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும் என்றும் இந்தக் கூட்­டத்தில் முடிவு செய்­யப்­பட்­டது.

கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான க.துரை­ரெட்­ண­சிங்கம், க.கோடீஸ்­வரன் தவிர்ந்த ஏனைய அனைத்து எம்.பி.க்­களும் பாரா­ளு­மன்றக் குழுக்­ கூட்­டத்தில் கலந்­து ­கொண்­டனர்.

இங்கு கருத்துத் தெரி­வித்த கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன்,

இனப்­பி­ரச்­சி­னைக்­கான அரசியல் தீர்வு இழுத்தடிக்கப்படுகின்றமை கவலையளிக் கும் விடயமாகவுள்ளது. இந்த விடயத்தில் நாம் தொடர்ந்தும் அக்கறை செலுத்த வேண் டும். ஜனாதிபதித் தேர்தல் முதலில் நடை பெறவிருப்பதனால் அது குறித்தும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Previous Post

மஹிந்த கைகாட்டுபவரை ஆதரிப்போம்

Next Post

ஹிஸ்புல்லாவின் மட்டு. பல்கலைக்கழகம் இடியாய் வந்த செய்தி!!

Next Post

ஹிஸ்புல்லாவின் மட்டு. பல்கலைக்கழகம் இடியாய் வந்த செய்தி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures