Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நான்காவது நாளாகவும் தொடர்கிறது மதத் தலைவர்களின் போராட்டம்

June 20, 2019
in News, Politics, World
0

சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரரின் போராட்டம் 4ஆவது நாளாகவும் தொடர்கிறது.

அதற்கமைய தேரர் உள்ளிட்ட மதத்தலைவர்கள் இன்றும் (வியாழக்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

கல்முனையில் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மதத்தலைவர்களின் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய நேற்று போராட்டக்களத்திற்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் மற்றும் முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) ஆகியோர் போராட்டத்திற்கு ஆதரவை வெளியிட்டிருந்தனர்.

இதேவேளை கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரிய உண்ணாவிரதப் போராட்டத்தில் 1000 தீபங்கள் ஏற்றப்பட்டு இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

குறித்த 1000 தீபங்கள் ஏற்றும் நிகழ்வில் கல்முனையில் உள்ள இளைஞர்கள், ஆலயங்களின் தர்மகர்த்தாக்கள், கிறிஸ்தவ பாதிரியார்கள், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், பொது அமைப்புகள் மற்றும் மக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறுக் கோரி மதகுருமார்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை திங்கட்கிழமை 9 மணியளவில் ஆரம்பித்திருந்தனர்.

கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கையின் இந்துகுருமார் ஒன்றியத்தலைவர் சிவஸ்ரீ.க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள், கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான அழகக்கோன் விஜயரெட்ணம், சந்திரசேகரம் ராஜன் உள்ளிட்டோர் குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

Previous Post

ரயில் தொழிற்சங்கத்தினருக்கும் நிதி அமைச்சருக்கும் இடையில் கலந்துரையாடல்

Next Post

கல்முனை போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கிழக்கில் ஹர்த்தால்

Next Post

கல்முனை போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கிழக்கில் ஹர்த்தால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures