Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளுக்கு விடுத்த எச்சரிக்கையை தளர்த்தியது இத்தாலி!

June 1, 2019
in News, Politics, World
0
இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளுக்கு விடுத்த எச்சரிக்கையை தளர்த்தியது இத்தாலி!

இலங்கைக்கு பயணம் மேற்கொள்வது தொடர்பாக சுற்றுலாப் பயணிகளுக்கு விடுத்திருந்த பயண எச்சரிக்கையை இத்தாலி தளர்த்தியுள்ளது.

இத்தாலி வெளியுறவுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் மிகுந்த கவனமாக இருக்குமாறு இலங்கைக்கு வரும் தனது பிரஜைகளுக்கு இத்தாலிய அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

இலங்கையில் தற்போது பாதுகாப்பு நிலைமை சாதாரண நிலைக்குத் திரும்புகின்றது. எனினும் அவசரகால நிலை எதிர்வரும் ஜூன் 21ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என்றும் இத்தாலி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதேநேரம் இத்தாலிய சுற்றுலாப் பயணிகள் தமது பயணங்களை ஆரம்பிக்கும் முன்னர் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் ஊடகங்களின் ஊடாக தகவல்களை பெற்றுக்கொள்ளுமாறும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக சீனா, சுவிட்ஸர்லாந்து, ஜேர்மனி, இந்தியா மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக எச்சரிக்கையை தளர்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஜனாதிபதித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானது!

Next Post

மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை கோரப்போவதில்லை

Next Post
மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை கோரப்போவதில்லை

மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை கோரப்போவதில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures