Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ரிஷாத், அசாத் சாலிக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை – சுசில்

May 20, 2019
in News, Politics, World
0

நீதித்­து­றைக்கு அவ­ம­திப்­பினை ஏற்­ப­டுத்தும் வித­மாக கருத்­து­ரைத்த மேல்­மா­காண சபை ஆளுநர் அசாத் சாலி மற்றும் அமைச்சர் ரிஷாத் பதி­யூதீன் உள்­ளிட்­ட­வர்கள் தொடர்பில் நீதித்­து­றை­சார்ந்த அமைச்சர் ஏன் இது­வ­ரையில் எவ்­வித நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுக்­க­வில்லை என்று எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுசில் பிரே­ம­ஜ­யந்த கேள்­வி­யெ­ழுப்­பினார்.

இன்று சட்­ட­வாட்சிக் கோட்­பாடு நடை­மு­றையில் செயற்­ப­டு­கின்­றதா என்ற சந்­தேகம் காணப்­ப­டு­கின்­றது. அர­சாங்­கத்தின் இய­லா­மை­யினை மறைப்­ப­தற்கு சட்­டத்தின் மீது பழி சுமத்­தப்­ப­டு­கின்­றது என்றும் அவர் குறிப்­பிட்டார்.

எதிர்க்­கட்சி தலைவர் அலு­வ­ல­கத்தில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு கருத்­து­ரைக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

பயங்­க­ர­வாத அமைப்­புக்­க­ளுடன் நீதி­ப­தி­க­ளுக்கும் தொடர்­புண்டு என மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி பகி­ரங்­க­மாக தெரி­வித்­துள்ள கருத்து நீதித்­து­றை­யினை அவ­ம­திப்­ப­தா­கவே காணப்­ப­டு­கின்­றது. நீதி­ப­தி­க­ளுக்கு அவப்­பெ­ய­ரினை ஏற்­ப­டுத்தும் வித­மாக கருத்­து­ரைத்­துள்­ளமை சட்­டத்­தின் பிர­காரம் தண்­ட­னைக்­குட்­ப­டுத்­தப்­பட வேண்டும். ஆனால் இவ­ரது கருத்­துக்கு எதி­ராக நீதி­ய­மைச்சர் தலதா அத்துக்­கோ­ரல வெறும் மறுப்பு மாத்­தி­ரமே தெரி­வித்தார். மாறாக அர­சி­ய­ல­மைப்பில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­மைக்கு அமைய எவ்வித சட்ட நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்­ள­வில்லை.

அவ­ச­ர­கால சட்டம் நடை­மு­றையில் இருக்கும் போதும் கூட அர­சி­யல்­வா­தி­களின் தலை­யீடு அனைத்து செயற்­பா­டு­க­ளிலும் காணப்­பட்­டுள்­ளன. தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டை­ய­வர்­க­ளாக சந்­தே­கத்தின் கைது செய்­யப்­பட்­ட­வர்­களை விடு­தலை செய்­யு­மாறு இரா­ணுவ தள­ப­திக்கு அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் கோரிக்கை விடுத்­த­தாக குறிப்­பிட்­ட­மையின் பின்­னணி என்ன? நெருக்­கடி காலத்தில் கூட பொறுப்பு வாய்ந்­த­வர்­களின் கட­மை­க­ளுக்கு விளை­வு­களை ஏற்­ப­டுத்­தி­ய­மையும் தண்­ட­னைக்­கு­ரிய செயற்­பா­டாகும். இவ்­வி­டயம் தொடர்­பிலும் நீதி­ய­மைச்சர் எவ்­வித நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுக்­க­வில்லை.

வெல்­லம்­பிட்டி செப்பு தொழிற்­சா­லையில் இருந்து கைது செய்­யப்­பட்­ட­வர்கள் விடு­தலை செய்­யப்­பட்­ட­மையின் பின்­ன­ணியில் நிச்­சயம் அர­சியல் தலை­யீடு காணப்­ப­டு­கின்­றது. அவ­ச­ர­கால சட்டம் நடை­மு­றையில் இருக்கும்போது பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் இவர்கள் கைது செய்­யப்­ப­டாமல் சாதா­ரண சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்­றத்தின் ஊடாக விடு­தலை செய்­யப்­பட்­டுள்­ளார்கள். இவ்­வி­ட­யத்தில் நீதி­மன்­றத்­திற்கும் தவ­றான விட­யங்­களே முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இவ்­வி­டயம் தொடர்பில் ஏன் நீதி­ய­மைச்சர் சட்ட நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­க­வில்லை. இன்று சாதா­ரண மக்­க­ளுக்கு மாத்­தி­ரமே சட்டம் முறை­யாக செயற்­ப­டு­கின்­றதா என்ற சந்­தேகம் எழு­கின்­றது. பெய­ர­ள விலே சட்­ட­வாட்சிக் கோட்­பாடு செயற்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது.

அர­சாங்கம் ஒரு தரப்­பி­ன­ருக்கு எதி­ராக ஆரம்­பத்தில் இருந்து கொண்டு வர முனை­கின்ற ஒவ்­வொரு விட­யங்­களும் அர­சாங்­கத்­திற்கே எதிர் விளை­வு­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. புதிய பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்­டத்தை தேவை­யற்­றது என்று ஐக்­கிய தேசிய கட்­சியின் பிரதி தலைவர் சஜித் பிரே­ம­தாஸ தற்­போது குறிப்­பி­டு­வது பய­னற்­றது.

தீவி­ர­வா­தத்தை இல் ­லா­தொ­ழிக்க புதிய பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்­டத்தை உரு­வாக்க வேண்டியதில்லை. 2015.09. 29 ஆம் திகதி நல்­லாட்சி அர­சாங்கம் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வைக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றவே செயற்­ப­டு­கின்­றது. புதிய பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்டம் தேவை­யற்­றது என்று மக்கள் மத்­தியில் குறிப்­பி­டு­வதால் எவ்­வித பயனும் ஏற்­ப­டாது. எந்த இடத்தில் எதிர்ப்­பினை தெரி­விக்க வேண்­டுமோ அவ்­வி­டத்தில் எதிர்ப்­பினை வெளிப்­ப­டுத்த வேண்டும் என்­பதை அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ இனி­யா­வது புரிந்து கொள்ள வேண்டும்.

புதிய பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்­டத்தின் பாரிய விளை­வுகள் தொடர்பில் உரிய தெளி­வில்­லா­ம­லேயே சபை முதல்வர் ல­க் ஷமன் கிரி­யெல்­லவும், ஐக்­கிய தேசிய கட்­சியின் பின்­வ­ரிசை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் போலி­யான கருத்­துக் களை குறிப்­பி­டு­கின்­றார்கள். புதிய பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்­டத்தில் உள்­ள­டக்­கி­யுள்ள ஏற்­பா­டு­க­ளினால் ஏற்­ப­ட­வுள்ள விளை­வு­க­ளையும், நடை­மு­றையில் உள்ள பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் சிறப்­பி­யல்­பு­க­ளையும் ஆளும் தரப்­பி­ன­ருக்கு எடுத்­து­ரைக்க தயார் . அர­சாங்­கத்தின் இய­லா­மை­யினை மூடி மறைக்க சட்­டத்தின் மீது குற்றஞ்சாட்டுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

Previous Post

செல்பி எடுத்தவாறு நீராடிய இளைஞன் உயிரிழப்பு!

Next Post

மதுபான விடுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் 11 பேர் பலி

Next Post

மதுபான விடுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் 11 பேர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures