Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தொழிற்சாலையில் பணிபுரிந்தவரிடமிருந்து 75 இலட்சம் பெறுமதியான 3 காசோலைகள்

May 18, 2019
in News, Politics, World
0
ஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்திய இன்சாப் அஹமட் என்பவருக்கு சொந்தமான, வெல்லம்பிட்டியிலுள்ள செப்புத்தொழிற்சாலையில் பணிபுரிந்த அப்துல்லா என்றழைக்கப்படும் கருப்பையா ராஜேந்திரன் என்பவரிடமிருந்து 75 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று காசோலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த விடயத்தை கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் வெல்லம்பிட்டி பொலிஸார் இன்று -17- அறிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர், செப்புத்தொழிற்சாலையின் உரிமையாளருடன் நெருங்கிய தொடர்பினைப் பேணியுள்ளதாக வெல்லம்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கருப்பையா ராஜேந்திரனின் திருமண நிகழ்விற்கு செப்புத்தொழிற்சாலையின் உரிமையாளர் இரண்டு இலட்சம் ரூபா பணம் வழங்கியமை தொடர்பிலும் தகவல்கள் கிடைத்துள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழரான குறித்த சந்தேகநபர் தொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கொழும்பு மேலதிக நீதவானுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய,  அப்துல்லா என்றழைக்கப்படும் கருப்பையா ராஜேந்திரனை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த 6 ஆம் திகதி நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள செப்புத்தொழிற்சாலையின்  9 ஊழியர்களின் தொலைபேசி உரையாடல்கள் தொடர்பான அறிக்கையைப் பெறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர்கள் 10 பேரின் வங்கிக் கணக்குகள் தொடர்பான அறிக்கையை வெல்லம்பிட்டிய பொலிஸாருக்கு வழங்குமாறு  அரச மற்றும் தனியார் வங்கிகள் சிலவற்றுக்கு மேலதிக நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Previous Post

“130 ஆண்டுகள் நிறைவடைந்த ஈபிள் டவர்”

Next Post

தேசிய பாதுகாப்புக்கு முதலிடம் வழங்க வேண்டும் – சஜித்

Next Post

தேசிய பாதுகாப்புக்கு முதலிடம் வழங்க வேண்டும் - சஜித்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures