Sunday, September 14, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அவசரகால சட்டம் அவசியம் – சித்தார்த்தன் வலியுறுத்து

May 16, 2019
in News, Politics, World
0

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையிலிருந்து மீள அவசரகால சட்டம் அவசியமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு அவசரகால சட்டம் ஜனநாயக ரீதியாக பாதிப்பினை ஏற்படுத்தும் பட்சத்தில் மாத்திரம் அதனை எதிர்க்க வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலையினை கட்டுப்படுத்துவதற்காக அவசரகால சட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் உள்ள அனைவருமே சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். கலவரங்களை அடக்குவதற்கு அவசரகால சட்டத்தின் தேவை அரசாங்கத்திற்கு அவசியமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அவசரகால சட்டத்தை தொடர்ந்தும் நீடிப்பது குறித்து நாடாளுமன்றில் தீர்மானிக்கப்படும் பட்சத்தில் அது கூட்டமைப்பில் தங்கியில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் அவசரகாச சட்டம் தொடர்பான கொள்கை ரீதியான முடிவை தமிழ் தேசிய கூட்டமைப்பு விரைவில் தீர்மானிக்குமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

762 சிறைக் கைதிகளுக்கு விடுதலை!

Next Post

சமூக வன்முறைகள் குறித்து அவதானம்

Next Post

சமூக வன்முறைகள் குறித்து அவதானம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures