Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

போரின் பின் 7 தடவைகள் பாரிய, அழிவை ஏற்படுத்த முயற்சித்த புலிகள் – அம்பலமாக்கும் முன்னாள் இராணுவத் தளபதி

May 15, 2019
in News, Politics, World
0
போரின் பின்னர் ஏழு தடவைகள் தமிழீழ புலிகள் இலங்கையில் பாரியளவில் அழிவுகளை ஏற்படுத்துவதற்கு முயற்சித்தனர் என முன்னாள் இராணுவத் தளபதி தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.  அவர் மேலும் கூறுகையில்,
ஊடகங்களோ, மக்களோ யாரும் அறிந்திராத ஓர் விடயத்தை நான் இப்பொழுது கூறுகின்றேன். தமிழீழ விடுதலைப் புலிகள் போரின் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், ஏழு தடவைகள் நாட்டில் பாரிய அழிவுகளை ஏற்படுத்த முயற்சித்தனர்.
அந்த ஏழு முயற்சிகளும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டிருந்தது. இந்த தாக்குதல் முயற்சிகளுடன் தொடர்புடைய குழுக்கள் முற்று முழுதாக அழித்தொழிக்கப்பட்டது.
இந்த சம்பவங்கள் சமூகத்திற்கு தெரியாமலேயே மேற்கொள்ளப்பட்டடிருந்தது. இது இலங்கை படையினரின் அதி விசேட திறமையாகவே கருதப்பட வேண்டும்.
உலகின் மிகப் பலம்பொருந்திய உளவுப் பிரிவினர் இலங்கை படையினர் மேற்கொண்ட வீர தீர செயற்பாடுகளை இன்றும் பாடமாக கற்று தேர்ந்து வருகின்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பாரியளவில் ஆயுதக் கப்பல்கள் காணப்பட்டன. இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவிருந்த பாரிய ஆயுதக் கப்பல் ஒன்று இந்தோனேசியாவில் வைத்து அழிக்கப்பட்டது.
இந்தோனேசியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பாரிய அயுதக் கப்பல் ஒன்று பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியிருந்தனர்.
இன்று வரையிலும் யாருக்கும் தெரியாத பல்வேறு சாதனைகளை இலங்கைப் படையினர் மேற்கொண்டுள்ளனர் என முன்னாள் இராணுவத் தளபதி தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
Previous Post

நோன்பு மாதத்தில் நிம்மதியற்ற வாழ்க்கை

Next Post

இன அழிப்பு மேற்கொண்டவர்களின் பார்வை, தற்போது முஸ்லிம்களின் மீது திரும்பியுள்ளது – சீ.வி.விக்னேஸ்வரன்

Next Post

இன அழிப்பு மேற்கொண்டவர்களின் பார்வை, தற்போது முஸ்லிம்களின் மீது திரும்பியுள்ளது - சீ.வி.விக்னேஸ்வரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures