Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

லண்டனில் பெண்களிடம் வசீகரமாக பேசி பணமோசடி செய்த இந்தியருக்கு 6 ஆண்டு சிறை

May 4, 2019
in News, Politics, World
0

லண்டனில் வசிப்பவர் கீயர் வயாஸ். இவர் இந்திய வம்சாவளியினைச் சேர்ந்தவர் ஆவார். இவர் கடந்த 2014ம் ஆண்டு முதல் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு ஆட்கள் எடுக்கும் ஏஜென்டாக பணிபுரிந்து வருகிறார். இவர் தொழில்துறையில் பணம் பார்க்க வேண்டும் எனும் எண்ணம் கொண்டவராவார்.

இதற்காக எளிதில் பணம் பெற என்ன வழி என சிந்தித்து வந்துள்ளார். அப்போது பெண்களை ஆன்லைனில் நம்பும்படி பேசினால், அவர்களிடமிருந்து பணம் பறிக்கலாம் எனும் எண்ணம் எழுந்துள்ளது.

இதையடுத்து ஆன்லைனில் பெண்களிடம் தொடர்ந்து வசீகரமாகவும், நம்பும்படியும் பேசி வந்துள்ளான். மேலும் வயாஸ் ஒரு நிதி நிறுவனத்தில் பணிபுரிவதாகவும் கூரியுள்ளான். இவனது பேச்சில் இருந்த தெளிவை கண்டு 6 பெண்கள் வயாசிடம் தொடர்ந்து பேசியும், அவன் மீது நம்பிக்கையும் வைக்க தொடங்கினர்.

இதனை பயன்படுத்திக் கொண்ட வயாஸ், ஒரு கட்டத்தில் மிகப்பெரிய தொழிலில் ஈடுபட போவதாகவும், பல்வேறு பெரிய நிறுவனங்களில் முதலீடு செய்ய போவதாகவும் கூறியுள்ளான். இதனால் பல கோடிகள் லாபம் பார்த்து விடலாம் எனவும் தனது திட்டங்களை அவர்களிடம் கூறி, பணம் கேட்டுள்ளான்.

முதலீட்டை விட பல கோடிகள் அதிகம் திரும்ப கிடைக்கும் என நம்பிய அந்த பெண்கள், வயாஸ் கேட்டபோதெல்லாம் பணம் கொடுத்து வந்துள்ளனர். இது தொடரவே 2014-2017ம் ஆண்டு வரையிலான பகுதியில் ரூ.7 கோடி பறித்துள்ளான்.

இதையடுத்து அப்பெண்கள் பணம் தருவதை நிறுத்திவிடவே, இதுவரை கொடுத்த பணம் உங்களுக்கு திரும்ப வராது. ஆகையால் பணம் கொடுத்து தான் ஆக வேண்டும் என மிரட்டியுள்ளான்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த விசாரணையில் மொத்தம் ரூ.8 கோடி மோசடி செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. போலீசார் பணத்தை பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் வயாசை கைது செய்து, அவனிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் வயாஸ் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு கடந்த புதன் அன்று கிங்ஸ்டன் நீதிமன்றத்திற்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் வயாசுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளனர்.

Previous Post

இந்தியாவுக்கு சலுகையை ரத்து செய்யக்கூடாது- அமெரிக்க எம்பிக்கள் வலியுறுத்தல்

Next Post

அமெரிக்காவில் ஆற்றில் விழுந்த விமானம் – பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

Next Post

அமெரிக்காவில் ஆற்றில் விழுந்த விமானம் - பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures