கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் விஜயம் செய்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் சர்வகட்சி மாநாடு தற்போது இடம்பெற்று வருகின்றது.
இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டு தாக்குதல்கள் குறித்து அமெரிக்கா முன்கூட்டியே அறிந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் இந்த விடயம் குறித்து அமெரிக்கா அறிந்திருக்கவில்லை என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையிலும் இலங்கை அதிகாரிகள் அதனை பகிர்ந்துகொள்வதில் தோல்வியை கண்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.