Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வர்த்தகர்கள் இருவர் கடத்தப்பட்டு கொலை – பொறுப்பதிகாரி நீதிமன்றில் முன்னிலை

February 27, 2019
in News, Politics, World
0

காலி ரத்கம பகுதியில் வர்த்தகர்கள் இருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தென்மாகாண விசேட குற்ற விசாரணை பிரிவின் பிரதி பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய கபில நிஷாந்த டி சில்வா மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

அதன்படி இன்று (புதன்கிழமை) அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

அத்தோடு, இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள தென் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் விசாரணை பிரிவின், ஆயுத மற்றும் கைத்துப்பாக்கி களஞ்சியம் முத்திரையிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் ஆலோசனைக்கு இணங்க குறித்த களஞ்சியம் முத்திரையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த ஆயுத களஞ்சியசாலைக்கு விசேட பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வர்த்தகர்கள் கடத்தி செல்லப்பட்ட சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் கெப் ரக வாகனம் ஒன்று நேற்று குற்ற புலனாய்வு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் வலஸ்முல்ல காட்டு பகுதியில் வலஸ்முல்ல நீதவான் சுரங்க முனசிங்க முன்னிலையில் மனித எச்சங்கள் சிலவும் மீட்கப்பட்டுள்ளன.

காலி- ரத்கம பகுதியில் வசிக்கும் 31 வயதுடைய ரசீன் சிந்தக்க மற்றும் 33 வயதுடைய மஞ்சுல அசேல ஆகியோர் கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் திகதி காணாமல் போயிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, தென் மாகாண விசேட விசாரணை பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து, குறித்த வர்த்தகர்கள் இருவரும் கடத்தப்பட்டு அக்மீமன – கொனாமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

அத்தோடு கொலை செய்யப்பட்ட பின்னர், அவர்களது உடல்கள் வலஸ்முல்ல – மெதகம்கொட – கனுமுல்தெனிய வனப்பகுதியில் எரிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பல உண்மைகள் வெளிவந்துள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Previous Post

வடக்கு மாகாணத்தில் உள்ள 248 பாடசாலைகளை மூடுவதற்கான அபாயம்

Next Post

சென்னை தமிழர் விமானி அபினந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியது எப்படி

Next Post

சென்னை தமிழர் விமானி அபினந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியது எப்படி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures