மூத்த ஊடகவியலாளர் என தம்மை கூறிக்கொண்டு வாழும் சிலர் – சமூகத்தில் பல அடாவடிகளில் ஈடுபடுவதை காணக்கூடியதாக உள்ளது .
மற்றவர்களை பற்றி அவதூறு எழுதுவதும் ,மற்றவர்களை தேவையற்று விமர்சிப்பதுமே இவர்களின் நாளாந்த வேலை .
சமூகத்துக்கு ஒரு நல்ல விடயத்தைப்பற்றி கூறவோ ,வாய்விட்டு பேசவோ வக்கில்லாத அரைகுறை மனிதர்கள் தம்மை ஊடகவியலாளர் என கூறித் திரிவது ,வெட்கத்துக்கும் அவமானத்துக்கும் உரியது .
எங்கே தமக்கு சலுகை கிடைக்கிறதோ அவர்களுக்காக பாடுவதும் பின்னர் அங்கிருந்து நழுவி ,இன்னொருவருக்காக பாடுவதும் ,ஒருவரோடு ஒருவரை முகம்முறிவு ஏற்பட வைப்பதும்தான் .ஊடகவியலாளர்கள் என்ற போர்வைக்குள் இருக்கும் கூட்டம் செய்யும் கேவலமான வேலை .
இவர்கள் எப்படி நம் சமூகத்தின் செய்திகளை உலக அரங்குக்கு கொண்டு செல்வார்கள் .எழுதப்படிக்க தெரியாதவன் ஊடகவியளாள் ஆகும்போது அந்தரிப்பது நம் இனமே .