Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தென்கொரியாவில் இருந்து படைகளை திரும்ப பெறும் திட்டம் இல்லை

February 24, 2019
in News, Politics, World
0

கொரிய தீபகற்ப பகுதியில் வட, தென் கொரியாக்களுக்கு இடையே மோதல் போக்கு நிலவி வந்ததாலும், வடகொரியாவின் தொடர் அணு ஆயுத சோதனைகளாலும், தென் கொரியாவில் அமெரிக்க ராணுவம் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது. அந்த நாட்டின் பாதுகாப்புக்காக இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா கூறி வருகிறது.

ஆனால் சமீப காலமாக வடகொரியா, தென் கொரியா இடையேயும், அமெரிக்கா-வடகொரியா இடையேயும் சுமுக உறவு மலர்ந்து உள்ளது. வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வருகிற 27 மற்றும் 28-ந்தேதிகளில் வியட்நாமில் சந்தித்து பேசவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் போது தென் கொரியாவில் இருந்து படைகளை வாபஸ் பெறுவது குறித்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.

இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் டிரம்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில், ‘இல்லை. அது (படை வாபஸ்) குறித்த திட்டம் இல்லை. எங்கள் பேச்சுவார்த்தை திட்டத்திலும் இந்த விவகாரம் இல்லை’ என்று திட்டவட்டமாக கூறினார்.

Previous Post

நேபாள தலைநகர் காட்மாண்டுவில் குண்டுவெடிப்பு; ஒருவர் சாவு

Next Post

டிவி ஆண்டனாவில் தொங்கியவாறு காகத்தை ருசிபார்த்த பாம்பு

Next Post

டிவி ஆண்டனாவில் தொங்கியவாறு காகத்தை ருசிபார்த்த பாம்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures