தான்சானியா நாட்டின் சோங்வே பகுதியில் மினி பஸ் ஒன்று நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. அதில் ஏராளமானோர் பயணம் செய்தனர்.
டுண்டுமா பகுதி அருகே மினி பஸ் சென்றபோது எதிரே வந்த லாரியுடன் வேகமாக மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பெண்கள் உள்பட 17 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
விபத்து குறித்து அறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரிசெய்தனர். சாலை விபத்து குறித்து அறிந்த அந்நாட்டு அதிபர் ஜான் மொகபுலி, விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

