நாட்டின் அரசியலில் தீவிர மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியாளர்களை இன்று (திங்கட்கிழமை) சந்தித்து கருத்துரைத்த அவர், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ரத்து செய்ய வேண்டிய நேரம் இது என கூறினார்.
71 ஆண்டுகால சுதந்திரத்தை நினைவூட்டுவதால், உண்மையான பொருளாதார சுதந்திரத்தை நாடு அனுபவித்து வருகிறதா என அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ரத்து செய்வோம் என பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என அவர் கூறினார்.

