கொழும்பு கொட்டாஞ்சேனை மல்வத்தை பிரதேசத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்த கஞ்ஜிபானி இம்ரானின் கள்ளக் காதலி மீது நேற்றிரவு இனந்தெரியாத துப்பாக்கி தாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் அப்பெண் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
39 வயதான “குடு சூட்டி” எனும் பெயரில் அறிமுகமாகியுள்ள ஆசா பாரி எனும் பெண்ணே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இப்பெண்ணின் முதுகு மற்றும் தலைப் பகுதிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

