கிளிநொச்சி- கரைச்சி பிரதேச சபைக்கு சொந்தமான இடம் ஒன்றிலிருந்து பெறுமதியான தங்க ஆபர ணம் ஒன்றை மீட்ட அரச உத்தியோத்தா் ஒருவா் அதனை பிரதேசசபையிடம் ஒப்படைத்துள்ளாா்.
குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. பளைப் பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தராக கடமையாற்றும் இ.போல்ராஜ் என்பவரே ஆபரணத்தை ஒப்படைத்துள்ளாா்.
இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்குள் குவிந்து வருவதுடன், பிரதேசசபையும் வாழ்த்துக்களை கூறியிருக்கின்றது. பெறுமதியான பொருட்களை தட்டிச்சுற்றும் இக்காலத்திலும் இப்படியான நல்ல உள்ளங்கள் எம் மத்தியில் வாழ்வது பெருமைக்குரிய விடயமாகும்.

