இந்தோனேசியாவில் சுலவேசி மாகாணத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.
சுலவேசி தீவின் தெற்கே பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வீடுகள், அரசு கட்டடங்கள், பள்ளி கூடங்கள் மற்றும் பாலங்கள் சேதமடைந்தன.
இதில் 6 பேர் பலியான நிலையில் தற்போது, அந்த எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. 24 பேரை காணவில்லை. கனமழையால் 3,321 குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
46 பேர் சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்டு குழுவினர் ஈடுபட்டு உள்ளனர்.

