சட்டவிரோத குடியேற்றம், போதைப்பொருள் கடத்தலை தடுக்கவே மெக்சிகோ எல்லையில் தடுப்புசுவர் அமைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைவதை தடுக்க, மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் அமைக்க , ஜனநாயக கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், தடுப்பு சுவர் கட்டுவதற்கான நிதியை ஒதுக்க முட்டுக்கட்டை போட்டது. இதனால் அமெரிக்காவில் கடந்த ஒரு மாதமாக அரசு துறைகள் சரிவர இயங்கவில்லை.
போதைபொருள் கடத்தல், சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கவே தடுப்பு சுவர் கட்டப்படுவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். எந்த நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும் அமெரிக்காவில் சட்டப்படி குடியேறலாம் என்று கூறிய டிரம்ப், தடுப்பு சுவர் எழுப்புவது குறித்த உண்மை தன்மையை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும், என்றார்.

