Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புதிய அர­ச­மைப்பு நிறை­வே­றி­னால் நாடு ஒன்­பது துண்­டு­க­ளாகப் பிரி­யும்

January 10, 2019
in News, Politics, World
0

புதிய அர­ச­மைப்பு நிறை­வேற்­றப்­பட்­டால் நாட்­டுக்கு ஏற்­ப­டும் பாத­கங்­க­ளைப் பட்­டி­ய­லிட்­டுள்ள எதிர்க்­கட்­சித் தலை­வர் மகிந்த ராஜ­பக்ச, நாட்டை ஒன்­பது துண்­டு­க­ளா­கப் பிரித்து சுயாட் சிக்கு சமாந்­தி­ர­மான அதி­கா­ரங்­களை இந்த அர­ச­மைப்பு வழங்­கும். அதற்கே தீர்­மா­னித்­துள்­ள­னர் என்­றும் குறிப்­பிட்­டார்.

எதிர்க்­கட்­சித் தலை­வர் மகிந்த ராஜ­பக்ச நேற்று புதன்­கி­ழமை விடுத்­துள்ள சிறப்பு அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்­டார். அவர் குறித்த அறிக்­கை­யில் மேலும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ள­தா­வது,

கடன் தொகை­யில்
தத்­த­ளிக்­கி­றது நாடு
2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்­றத்­தின் பின்­னர் நான்கு ஆண்­டு­கள் கடந்­துள்ள இந்­தச் சந்­தர்ப்­பத்­தில் மூன்று வித­மான அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு முகங்­கொ­டுத்­துள்­ளோம். இந்த நாடு சுதந்­தி­ரம் அடைந்த 1948ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்­டு­வரை ஆட்­சி­செய்த அர­சு­கள் பெற்­றுக்­கொண்ட மொத்த கடன் தொகை­யில் 50 வீத­மான கடன்­தொ­கையை கூட்டு அரசு பெற்­றுக்­கொண்­டுள்­ளது. எமது அரசு பெற்­றுக்­கொண்ட கடன்­களை மீள செலுத்­தவே ஐ.தே.க. அரசு கடன்­களை பெற்­றுக்­கொண்­டுள்­ள­தாக தெரி­விக்­கி­றது. ஆனால், கடந்த அர­சின் காலத்­தில் பெற்­றுக்­கொண்ட கடன்­தொகை அவ்­வாறே இருக்­கின்ற சூழ­லி­லேயே இலங்­கை­யின் மொத்த கடன் தொகை­யில் 50 வீத­மான கடன்­களை ஐ.தே.க. அரசு பெற்­றுக்­கொண்­டுள்­ளது.

2006 – 2014 இடைப்­பட்ட காலப்­ப­கு­தி­யில் எமது நாடு பார­தூ­ர­மான போருக்கு முகங்­கொ­டுத்­தது. 2007ஆம் ஆண்டு உலக பொரு­ளா­தா­ரம் கடும் நெருக்­க­டி­க­ளைச் சந்­தித்­தி­ருந்­தது. 1930ஆம் ஆண்­டுக்­குப் பின்­னர் 2008, 2009ஆம் ஆண்­டில்­தான் உல­கம் கடு­மை­யான பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளுக்கு முகங்­கொ­டுத்­தி­ருந்­தது. நாமும் அதற்கு முகங்­கொ­டுத்­தோம். அதே­போன்று வர­லாற்­றில் என்­றும் இல்­லா­த­வாறு 2006 -2014ஆம் ஆண்­டுக்கு உட்­பட்ட காலப்­ப­கு­த­யில் கனிய எண்ணை பெரல் ஒன்­றின் விலை 140 டொலர்­கள் வரை உயர்­வ­டைந்­தி­ருந்­தது.

இவ்­வாறு கடு­மை­யான பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளுக்கு மத்­தி­யில் குறித்த காலப்­ப­கு­த­யில் அமெ­ரிக்க டொல­ருக்கு நிக­ரான இலங்­கை­யின் ரூபா­வின் பெறு­மதி 28 ரூபா­வால் மாத்­தி­ரமே வீழ்ச்­சி­ய­டைந்­தி­ருந்­தது. ஆனால், கடந்த நான்கு ஆண்­டு­க­ளில் எவ்­வி­த­மான பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளும் இல்­லாது அமெ­ரிக்க டொல­ருக்கு நிக­ரான இலங்கை ரூபா­வின் பெறு­மதி 53 ரூபா­வால் வீழ்ச்சி கண்­டுள்­ளது.

எமது ஆட்­சி­யில் 7 சத­வீ­த­மா­க­வி­ருந்த பொரு­ளா­தார அபி­வி­ருத்தி தற்­போது 3 சத­வீ­த­மாக உள்­ளது. அதனை தெரிந்­து­கொண்­டு­தான் பொதுத் தேர்­தல் ஒன்றை நடத்தி நாட்டை மீண்­டும் எம்­மி­டம் கைய­ளிக்க அரச தலை­வர் நட­வ­டிக்­கை­யெ­டுத்­தார். ஆனால், அந்த முயற்சி தோல்­வி­ய­டைந்­து­விட்­டது. அடுத்த வாரம், அடுத்த மாதம் பொரு­ளா­தா­ரத்­தில் எவ்­வி­த­மான பேரி­டி­கள் நேரி­டும் என்று தெரி­யா­து­தான் பய­ணிக்­கின்­றோம்.

19 திருத்­தச் சட்­டம்
அடுத்­த­ப­டி­யாக நாம் முகங்­கொ­டுக்­கும் அச்­சு­றுத்­தல்­தான் 19ஆவது திருத்­தச்­சட்­டத்­தால் முழு அரச பொறி­மு­றை­யும் வீழ்ச்­சி­ய­டை­யும் நிலைமை. 19ஆவது திருத்­தச் சட்­டத்­தின் பிர­கா­ரம் நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ர­ணை­யொன்று தோல்­வி­ய­டைந்­தா­லும், சிம்­மா­சன உரை தோல்வி கண்­டா­லும் நான்­கரை வரு­டங்­க­ளுக்கு முன்­னர் நாடா­ளு­மன்­றத்­தைக் கலைக்க முடி­யாது.

நாட்­டின் ஆட்­சிக்கு அச்­சு­றுத்­தல் ஏற்­ப­டும் வித­மாக அரச தரப்­புக்­குள் கருத்து மோதல்­கள் வலுப்­பெற்­றால் தேர்­த­லொன்­றுக்கு அழைப்பு விடுத்து மக்­க­ளின் அபிப்­பி­ரா­யத்­தைக் கோரு­வ­து­தான் நாடா­ளு­மன்ற சம்­பி­ர­தாய முறை. ஆனால், அவ்­வா­றான சந்­தர்ப்­பம் 19ஆவது திருத்­தத்­தில் இல்­லா­மல் செய்­யப்­பட்­டுள்­ள­தால் அர­சும் அதன் உறுப்­பி­னர்­க­ளும் ஒரு பொறி­மு­றை­யின் கீழ் செயற்­ப­டும் நில­மையே காணப்­ப­டு­கி­றது.

1952, 1959, 1964, 2001ஆம் ஆண்­டு­க­ளில் அர­சுக்­குள் ஏற்­பட்ட நெருக்­க­டி­க­ளால்­தான் நாடா­ளு­மன்­றம் கலைக்­கப்­பட்­டது. தேவை­யான சந்­தர்ப்­பத்­தில் நாடா­ளு­மன்ற தேர்­தல் ஒன்­றுக்கு அழைப்பு விடுத்து மக்­க­ளின் அபிப்­பி­ரா­யத்தை பெற்­றுக்­கொள்­வது எவ்­வ­ளவு முக்­கி­யத்­து­வ­மா­னது என்­பது எதிர்­கா­லத்­தில் புரிந்­து­கொள்ள கூடி­ய­தா­க­வி­ருக்­கும். 1978ஆம் ஆண்டு அர­ச­மைப்­பில் ஆரம்­பத்­தில் இருந்து கூறப்­ப­டும் ஒரு குறை­பா­டு­தான் அரச தலை­வர் ஒரு கட்­சி­யி­லும், நாடா­ளு­மன்­றப் பெரும்­பான்மை மற்­றொரு தரப்­புக்கு இருக்­கும் சந்­தர்ப்­பத்­தில் குழப்­ப­க­ர­மான நிலமை தோன்­றும் என்­பது. 1994ஆம் ஆண்டு மற்­றும் 2001ஆம் ஆண்­டு­க­ளில் எமக்கு சிறந்த முன்­னு­தா­ர­ணங்­கள் இருந்­தன. நாட்­டின் அரச தலை­வர் நாடா­ளு­மன்ற தேர்­லுக்கு அழைப்பு விடுத்து, அதில் மாற்று தரப்பு நாடா­ளு­மன்­றில் பெரும்­பான்மை பெற்ற சந்­தர்ப்­பங்­க­ளில் அரச தலை­வர் குறித்த தரப்­பின் தலைமை அமைச்­ச­ருக்­கும், அமைச்­ச­ர­வைக்­கும் ஆட்சி அதி­கா­ரத்தை கொடுத்து ஒதுங்­கி­யி­ருந்­தார். ஆனால், இன்று அவ்­வா­றான சூழ­லொன்று இல்லை.

பொது தேர்­த­லொன்­றுக்கு அழைப்­பு­வி­டுத்து மக்­க­ளின் அபிப்­பி­ரா­யத்தை பெற்­றுக்­கொள்­ளும் சந்­தர்ப்­பம் தடை செய்­யப்­பட்­டுள்ள போதி­லும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­டன் இணைந்து அர­சொன்றை அமைத்து நாட்டை முன்­னோக்கி கொண்­டு­செல்­லும் முழு பொறுப்­பும் 19ஆவது திருத்­தத்­தில் அரச தலை­வ­ருக்­கு­தான் உள்­ளது. அர­சி­ன­தும், அமைச்­ச­ர­வை­யி­ன­தும் தலை­வர் அரச தலை­வர்­தான். அவ்­வா­றான அர­சில் செய்­யப்­ப­டும் அனைத்­துச் செயற்­பா­டு­க­ளுக்­கும் அரச தலை­வர்­தான் பொறுப்­புக்­கூற வேண்­டும்.

2018ஆம் ஆண்டு நடை­பெற்ற உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­த­லின் பின்­னர் ஐ.தே.க. அர­சுக்கு மக்­கள் ஆணை இல்லை. ஆனால், அவர்­கள் தொடர்ந்து தேர்­தல்­களை நடத்­து­வதை இழுத்­த­டித்து வரு­கின்­ற­னர். அவ்­வா­றான சந்­தர்ப்­பத்­தில் அரச தலை­வர் ஐ.தே.க. அர­சுக்கு ஆட்­சியை கொடுத்­து­விட்டு ஒதுங்­கி­யி­ருக்க முடி­யாது. 19ஆவது திருத்­தச்­சட்­ட­தால் நாட்­டின் முழு­மை­யான அரச பொறி­மு­றை­யும் குழப்­ப­க­ர­மா­ன­தாக மாறி­யுள்­ளது.

புதிய அர­ச­மைப்­பால்
நாடு பிள­வ­டை­யும்
மூன்­றா­வ­தாக எமது நாட்­டுக்கு உள்ள அச்­சு­றுத்­தல் அர­ச­மைப்பு நிர்­ணய சபை முன்­வைக்­க­வுள்ள புதிய அர­ச­மைப்­பா­கும். அரசு அதன்­மூ­லம் எதிர்­பார்ப்­ப­தா­வது கூட்டு ஆட்சி மூலம் நாட்டை ஒன்­பது துண்­டு­க­ளாக பிரித்து சுயா­தீன இராஜ்­ஜி­யங்­க­ளுக்கு சமாந்­தி­ர­மான அதி­கா­ரங்­களை பகிர்ந்­த­ளிப்­ப­தா­கும். இன்று கொழும்பு அர­சி­டம் உள்ள அனைத்து அதி­கா­ரங்­க­ளும் மாகா­ணங்­க­ளுக்கு பகிர்ந்­த­ளிக்­கப்­ப­ட­வுள்­ளன.

இதன்­மூ­லம் குறித்த மாகா­ணங்­க­ளில் பொலிஸ் அதி­கா­ரத்தை ஏற்­ப­டுத்­த­வுள்­ள­னர். நெருக்­க­டி­யான அல்­லது அச்­சு­றுத்­த­லான சந்­தர்ப்­பத்­தில் கொழும்பு அர­சால் சாதா­ரண சூழலை குறித்த மாகா­ணங்­க­ளில் ஏற்­ப­டுத்த அதி­கா­ரம் இல்லை என்­ப­து­டன், அதனை நாடா­ளு­மன்ற சட்­டங்­க­ளில் இருந்து விலக்­க­ளிக்­க­வும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த புதிய அர­ச­மைப்பை தயா­ரிப்­பது 19ஆவது திருத்­தச்­சட்­டத்தை தயா­ரித்து முழு நாட்­டை­யும் சிக்­க­லான நிலைக்­குத் தள்­ளி­ய­வர்­கள்­தான்.

இவ்­வா­றான அர­ச­மைப்பை தயா­ரிப்­ப­வர்­கள்­தான் 2017ஆம் ஆண்டு உள்­ளூ­ராட்சி மற்­றும் மாகாண சபைத் தேர்­தல் முறை­மை­க­ளை­யும் தயா­ரித்­தி­ருந்­த­னர். மேலே பார்த்­துக்­கொண்டு தேர்­தல் திருத்­தச் சட்­டங்­களை தயா­ரித்­த­வர்­கள்­தான் இன்று குறித்த முறை­யில் எதிர்­கா­லத்­தில் எந்­த­வொரு தேர்­த­லை­யும் நடத்­து­வ­தில்லை என்று. இவர்­கள் தயா­ரிக்­கும் புதிய அர­ச­மைப்பு நிறை­வேற்­றப்­பட்­டால் ஒரு­நா­டா­க­வுள்ள இலங்­கை­யின் எதிர்­கா­லத்­தில் இலங்கை ஒரு நாடாக இருக்­காது.

இலங்கை என்ற ஒரு நிர்­வா­கக் கட்;டமைப்பு இருக்­காது. எமக்­குக் கிடைத்­துள்ள தக­வல்­க­ளின் பிர­கா­ரம் பணத்தை அள்­ளி­வீசி உறுப்­பி­னர்­களை விலைக்கு வாங்­க­வுள்­ள­னர். அத­னால்­தான் மேற்­கூ­றப்­பட்­டது போன்று மூன்று அச்­சு­றுத்­தல்­களை இலங்கை எதிர்­கொண்­டுள்­ளது. இந்த மூன்று பார­தூ­ர­மான அச்­சு­றுத்­தல்­க­ளில் இருந்து நாட்டை மீட்­டெ­டுக்க எதிர் கூட்­ட­ணி­யான எம்­மால் மாத்­தி­ரமே முடி­யும் – என்­றுள்­ளார்.

Previous Post

திரைப்படம் பார்க்க பணம் தராத தந்தையை எரித்த மகன்

Next Post

பர­ரா­ஜ­சிங்­கத்தை பிள்­ளை­யான் உள்­ளிட்ட 6 பேர் இணைந்தே படு­கொலை செய்­தோம் திடுக்கிடும் வாக்குமூலம்

Next Post

பர­ரா­ஜ­சிங்­கத்தை பிள்­ளை­யான் உள்­ளிட்ட 6 பேர் இணைந்தே படு­கொலை செய்­தோம் திடுக்கிடும் வாக்குமூலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

புலிகளின் ஆயுதங்களை கடத்தி நடுகடலில் விரோதிகளுக்கு கைமாற்றிய கோட்டாபய!

கோட்டாபய கைது நிலை! நீதிமன்றத்தில் கோட்டா ரிட் தஞ்சம்!

June 17, 2026
திமுக தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்ட ‘குக்கர்’ படத்தின் டைட்டில் லுக்

திமுக தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்ட ‘குக்கர்’ படத்தின் டைட்டில் லுக்

June 17, 2026
மாதுளனின் துல்லிய பந்துவீச்சால் சுப்பர் ஓவரில் இந்திய ஏ அணியை வீழ்த்தியது இலங்கை ஏ அணி

மாதுளனின் துல்லிய பந்துவீச்சால் சுப்பர் ஓவரில் இந்திய ஏ அணியை வீழ்த்தியது இலங்கை ஏ அணி

June 16, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கடத்திச் சென்று தாக்கப்பட்ட 16 வயது சிறுவன் ; காணொளி வைரல் ; சம வயதுடைய சிறுவன் கைது 

June 16, 2026

Recent News

புலிகளின் ஆயுதங்களை கடத்தி நடுகடலில் விரோதிகளுக்கு கைமாற்றிய கோட்டாபய!

கோட்டாபய கைது நிலை! நீதிமன்றத்தில் கோட்டா ரிட் தஞ்சம்!

June 17, 2026
திமுக தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்ட ‘குக்கர்’ படத்தின் டைட்டில் லுக்

திமுக தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்ட ‘குக்கர்’ படத்தின் டைட்டில் லுக்

June 17, 2026
மாதுளனின் துல்லிய பந்துவீச்சால் சுப்பர் ஓவரில் இந்திய ஏ அணியை வீழ்த்தியது இலங்கை ஏ அணி

மாதுளனின் துல்லிய பந்துவீச்சால் சுப்பர் ஓவரில் இந்திய ஏ அணியை வீழ்த்தியது இலங்கை ஏ அணி

June 16, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கடத்திச் சென்று தாக்கப்பட்ட 16 வயது சிறுவன் ; காணொளி வைரல் ; சம வயதுடைய சிறுவன் கைது 

June 16, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures