Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புதைக்கப்பட்ட சிறுமியின் சடலத்தை தோண்டியெடுக்க நீதிமன்றம் உத்தரவு!

January 8, 2019
in News, Politics, World
0

கொலை செய்து புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் 9 வயது சிறுமியின் உடலைத் தோண்டியெடுக்க நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) உத்தரவிட்டுள்ளது.

பதுளை ஹாலி எல – கன்தேகெதர சார்ணியா தோட்டம் மஹதென்ன பிரிவில் கொலை செய்து புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் 9 வயது சிறுமியின் உடலத்தையே நாளை மறுதினம் தோண்டியெடுப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சுமார் ஒரு வருடத்திற்கு முன்னால் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கும் நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாய் மற்றும் அவரின் கள்ளக்காதலன் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

வவுனியா, செட்டிக்குளத்தை சேர்ந்த குறித்த சிறுமியின் 26 வயதுடைய தாய் அவரது கணவனைப் பிரிந்து கள்ளக்காதலனுடன் ஹாலிஎல பகுதியில் வசிந்து வந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த சிறுமி, தாயின் தங்கையிடம் வளர்வதாகவும், 5 வருடங்களுக்கு முன்பு சிறுமியை தங்கையிடம் ஒப்படைத்து விட்டதாகவும், குறித்த தாய் பொலிஸ் நிலையத்தில் தெரிவித்துள்ளார்.

பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

எதிர்கட்சி கூட்டணி குறித்து அரசாங்கம் அஞ்சுகிறது

Next Post

கண்டியில் ஐந்து மாடி கட்டடத்தில் பாரிய தீ!

Next Post

கண்டியில் ஐந்து மாடி கட்டடத்தில் பாரிய தீ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures