நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென தரையில் விழுந்து நொறுங்கியதில் விமானி உட்பட 5 பேர் பலியாயினர்.
நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில், போர்னோ மாகாணத்தில் டமாஸ்க் நகரில் போகோஹரம் பயங்கரவாதிகளுக்கு எதிரான
நடவடிக்கையில்,
அந்நாட்டு ராணுவத்தினர் ஈடுபட்டிருந்தனர்.
அவர்களுக்கு உதவுவதற்காக நைஜீரிய விமானப்படைக்கு
சொந்தமான ‘எம்.ஐ-35எம்’ ரக
ஹெலிகாப்டர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் விமானி உட்பட ஐந்து பேர்
இருந்தனர்.
ஹெலிகாப்டர் வானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே 5 பேரும் பரிதாபமாக உயிர் இழந்தனர்.