நத்தார் பண்டிகைக் காலத்தில் அதிவேக நெடுஞ்சாலையைப் பயன்படுத்திய வாகனங்கள் மூலம் அரசாங்கத்துக்கு பெருந்தொகை வருமானம் கிடைத்துள்ளது
இதற்கிணங்க இந்த காலகட்டங்களில் நாளாந்த வருமானம் 3 கோடி ரூபாய்க்கும் அதிகமாகும் என அதிவேக நெடுஞ்சாலைகளுக்கான பணிப்பாளர் எஸ்.ஓப்பநாயக்க தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை 3 கோடி 20 இலட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும் இந் நாட்களில் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை 75 ஆயிரத்தை எட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை ஒரு இலட்சத்து 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.