Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மத்திய கிழக்குக்கான கடவுச்சீட்டு நிறுத்தம்

December 28, 2018
in News, Politics, World
0

குடிவரவு குடியகல்வு திணைக்களம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மாத்திரம் இதுவரை விநியோகித்து வந்த கடவுச்சீட்டு எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் வழங்கப்படமாட்டாது எனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஜனவரி முதலாந்திகதியிலிருந்து சகல நாடுகளுக்கான கடவுச் சீட்டு மாத்திரமே வழங்கப்படும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு இறுதிப்பகுதியில் இலத்திரனியல் கடவுச்சீட்டு அறிமுகப்படுத்தப்படவிருப்பதால், திணைக்களம் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாகத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் வஜிர லியனாரத்ன நேற்று தினகரனுக்குத் தெரிவித்தார்.

இதனடிப்படையில் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்வதற்காக ஜனவரி முதலாம் திகதிக்குப் பின்னர் புதிதாக கடவுச்சீட்டைப் பெறுவோர் அல்லது கடவுச்சீட்டை புதுப்பிப்போர் சகல நாடுகளுக்குமான கடவுச்சீட்டையே பெறுதல் வேண்டும் என்றும் அவர் கூறினார்.

டிசம்பர் 31ஆம் திகதிக்குப் பின்னர் எக்காரணம் கொண்டும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான கடவுச்சீட்டு வழங்கப்படாது என்பதுடன், ஏற்கனவே மத்திய கிழக்கு நாடுகளுக்ெகனக் கடவுச்சீட்டைப் பெற்றுக்ெகாண்டுள்ளவர்கள் அதனைப் பயன்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதேநேரம், அந்தக் கடவுச்சீட்டைப் புதுப்பிப்பது என்றால், சகல நாடுகளுக்குமான கடவுச்சீட்டையே பெற்றுக்ெகாள்ள வேண்டும். மேலும், இலத்திரனியல் கடவுச்சீட்டு அடுத்தாண்டு அறிமுகப்படுத்தப்படும்போது சகலரும் இலத்திரனியல் கடவுச்சீட்டைப் பெற்றுக்ெகாள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்தாண்டு (2019) இறுதியில் அறிமுகமாகவுள்ள இலத்திரனியல் கடவுச்சீட்டில் உரிமையாளரின் சுயவிபரங்கள் அடங்கிய இலத்திரனியல் ‘சிப்’ இணைக்கப்பட்டிருக்குமென்றும் அவர் குறிப்பிட்டார்.

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தில் தற்போது மத்திய கிழக்கு நாடுகளுக்கான கடவுச்சீட்டு கையிருப்பில் இல்லை. சகல நாடுகளுக்குமான கடவுச்சீட்டுகள் மாத்திரமே இருப்பதால், இலங்கையர்கள் அனைவருக்கும் எதிர்காலத்தில் இலத்திரனியல் கடவுச்சீட்டை வழங்கும் வகையில், சகல நாடுகளுக்குமான கடவுச்சீட்டை விநியோகித்து நிறைவு செய்வதற்கு இந்த நவடிக்ைக எடுக்கப்பட்டிருக்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மத்திய கிழக்கு நாடுகளுக்கான கடவுச்சீட்டுகளை மீண்டும் அச்சிட்டு விநியோகிப்பதால் ஏற்படும் வீண் விரயத்தைத் தவிர்ப்பது குறித்தும் திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளுக்குத் தொழிலுக்குச் செல்வோருக்குப் பல்வேறு நாடுகளிலும் தொழில் வாய்ப்புகள் கிடைக்கின்றன. அவ்வாறான வேளைகளில் அவர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிடிகிறது. அதனால், இந்தத் தீர்மானத்தை இலங்கை வெ ளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகமும் வரவேற்றுள்ளதாகத் திரு.வஜிர லியனாரத்ன மேலும் தெரிவித்தார்.

சகல நாடுகளுக்கான கடவுச்சீட்டை ஒரு நாள் சேவையில் பெறுவதாயின் பத்தாயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு தீவிரம்

Next Post

உச்ச மன்றிடம் வியாக்கியானம் கோருவதற்கே விரும்புகிறோம்

Next Post

உச்ச மன்றிடம் வியாக்கியானம் கோருவதற்கே விரும்புகிறோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தங்க விலையில் சடுதியான மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

ஒரே நாளில் 6,000 ரூபாயினால் அதிகரித்த தங்க விலை

June 16, 2026
புனித தலமான காசி பின்னணியில் நடிகை மதுபாலாவின் ‘சின்ன சின்ன ஆசை ‘

புனித தலமான காசி பின்னணியில் நடிகை மதுபாலாவின் ‘சின்ன சின்ன ஆசை ‘

June 16, 2026
நிழல் – திரைப்பட விமர்சனம்

நிழல் – திரைப்பட விமர்சனம்

June 15, 2026
பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் சமன் செய்தது ஜப்பான் ; சுவீடன், ஐவரி கோஸ்ட் வெற்றி

பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் சமன் செய்தது ஜப்பான் ; சுவீடன், ஐவரி கோஸ்ட் வெற்றி

June 15, 2026

Recent News

தங்க விலையில் சடுதியான மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

ஒரே நாளில் 6,000 ரூபாயினால் அதிகரித்த தங்க விலை

June 16, 2026
புனித தலமான காசி பின்னணியில் நடிகை மதுபாலாவின் ‘சின்ன சின்ன ஆசை ‘

புனித தலமான காசி பின்னணியில் நடிகை மதுபாலாவின் ‘சின்ன சின்ன ஆசை ‘

June 16, 2026
நிழல் – திரைப்பட விமர்சனம்

நிழல் – திரைப்பட விமர்சனம்

June 15, 2026
பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் சமன் செய்தது ஜப்பான் ; சுவீடன், ஐவரி கோஸ்ட் வெற்றி

பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் சமன் செய்தது ஜப்பான் ; சுவீடன், ஐவரி கோஸ்ட் வெற்றி

June 15, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures