ஜப்பான் நாட்டில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 42 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். Hokkaido என்ற தீவு பகுதியின் Hiragishi மாவட்டத்தில் உள்ள Sapporo உணவு விடுதியில் வெடி பொருள் வெடித்து சிதறியதில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் உணவருந்தி கொண்டிருந்தவர்களும் ஊழியர்களும் படுகாயம் அடைந்தனர்.
மர்ம பொருள் வெடித்ததில் உணவகம் தீ பற்றி உருக்குலைந்தது. இந்த விபத்தில் அருகில் இருந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்த முயற்சித்தனர்.
இந்த தீ விபத்தில் 40க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.இதில் இரண்டுக்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பிருப்பதாகவும் சப்போரோ நகர தீயணைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
வெடித்த பொருள் மற்றும் அதன் தன்மை குறித்தும், வெடிப்பொருளை வெடிக்கச் செய்தது பயங்கரவாத குமபலா என்றும் காவல்துறையினர் விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள்.

